மேலும் அறிய

IND vs AUS Final 2023: களமிறங்கிய 6 ஆயிரம் போலீஸ்.. திருப்பி விடப்படும் போக்குவரத்து.. பலத்த பாதுகாப்பில் நரேந்திர மோடி ஸ்டேடியம்!

India vs Australia World Cup Final 2023: அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தை சுற்றி போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த எதிர்பார்ப்பு அகமதாபாத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது. 

இந்த போட்டியின்போது அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தை சுற்றி போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக சாந்தி நிகேதன் (ஜூனியர்) பள்ளி சாலையில் இருந்து மோடேரா ஸ்டேடியம் வரையிலான பாதையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

நரேந்திர மோடி ஸ்டேடியம் அருகே பல சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜன்பத் டி முதல் மோடேரா ஸ்டேடியத்தின் பிரதான வாயில் வரை வாகனங்கள் செல்ல தடை போடப்பட்டுள்ளது. அதேபோல், கிருபா குடியிருப்பில் இருந்து மோடேரா ஸ்டேடியத்தின் பிரதான வாயில் வரை வாகனங்கள் செல்லவும் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மதுர் பால் பண்ணையிலிருந்து தபோவன் வட்டம் நோக்கி செல்லும் வாகனங்களும், தயானந்த சரஸ்வதி வட்டம் நோக்கி செல்லும் வாகனங்களும் திருப்பிவிடப்பட்டுள்ளது. 

காந்திநகர் கலெக்டர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பட் கோட்டேஷ்வர் சவுக்கிலிருந்து மோடேரா நோக்கி சாந்தி நிகேதன் (ஜூனியர்) பள்ளி வரையிலான சாலையில் கனரக வாகனங்கள் நுழைவது தடைசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மதர் டெய்ரியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அப்பல்லோ சர்க்கிள் வழியாக தபோவன் வட்டத்திற்கு திருப்பி விடப்படும். 

கிரிக்கெட் போட்டி தொடர்பான வாகனங்கள், அரசு வாகனங்கள், தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ்கள், அவசர காலங்களில் ஈடுபடும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.

பாதுகாப்பு பணியில் 6,000க்கும் மேற்பட்டோர்:  

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது அகமதாபாத் நகரம் மற்றும் நரேந்திர மோடி மைதானத்தில் காவலர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 6,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட உள்ளனர் என்று செய்தி நிறுவனமான PTI தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் நகரின் மோடேரா பகுதியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று அகமதாபாத் காவல்துறை ஆணையர் ஜி.எஸ்.மாலிக் அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மாலிக், ”குஜராத் காவல்துறை, ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் (RAF), ஊர்க்காவல்படையினர் மற்றும் பலரைச் சேர்ந்த பணியாளர்களை உள்ளடக்கிய விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பாதுகாப்பாக செல்வதற்கும், மைதானத்தில் பல்வேறு உயரதிகாரிகள் கலந்து கொள்வதற்கும் ஏற்ற வகையில் இந்த நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 6,000 வரிசைப்படுத்தப்பட்ட பணியாளர்களில், கிட்டத்தட்ட 3,000 பேர் மைதானத்திற்குள் நிறுத்தப்படுவார்கள். மற்ற பாதுகாப்பு வீரர்கள் ஹோட்டல்கள் வீரர்கள் மற்றும் பிரமுகர்கள் தங்கும் முக்கிய இடங்களைப் பாதுகாப்பார்கள்” என்று தெரிவித்தார். 

மேலும், வயர்லெஸ் நெட்வொர்க்குடன் கூடிய ஒரு தற்காலிக கட்டுப்பாட்டு மையம், மொபைல் சிக்னல் ஜாம்மர், அரங்கிற்குள் நிறுவப்பட்டுள்ளது. போட்டி நாளில், இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) மற்றும் டிஐஜி தரவரிசையில் உள்ள நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள், 23 துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) தலைமையில் காவல்துறையினர் செயல்படுவார்கள். உயரதிகாரிகளுக்கு உதவியாக 39 போலீஸ் உதவி கமிஷனர்கள் மற்றும் 92 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget