மேலும் அறிய

IND vs NZ: இந்தியா - நியூசிலாந்து அரையிறுதியில் மழை பெய்தால் யார் இறுதிப்போட்டிக்கு தகுதி..? முழு விவரம் உள்ளே!

நவம்பர் 15ஆம் தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மழை பெய்தால் அந்த போட்டி நவம்பர் 16ஆம் தேதி நிறைவடையும்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் அரையிறுதிப் போட்டி நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடைசியாக நடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்த்தீர்கள் என்றால் , அப்போதும் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே அரையிறுதிப் போட்டி இருந்தது, அந்த ஆட்டத்தில் மழை பெய்தது நினைவிருக்கும். மழை காரணமாக, போட்டி ரிசர்வ் டேக்கு ஒத்திவைக்கப்பட்டது, மறுநாள் நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தியது. இந்த முறையும் இந்த இரு அணிகளுக்கு இடையே போட்டி நடக்கும், ஆனால் நவம்பர் 15 அன்று மும்பையில் பலத்த மழை பெய்தால் என்ன நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்..

இந்தியா vs நியூசிலாந்து போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியிலோ அல்லது தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையே நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியிலோ தொடர் மழை பெய்தால், அந்த ஆட்டம் ரிசர்வ் நாளில் நிறைவடையும். ஐசிசி தனது இரண்டு அரையிறுதிப் போட்டிகளுக்கும் தலா ஒரு நாள் ரிசர்வ் நாள் வைத்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் நவம்பர் 15ஆம் தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மழை பெய்தால் அந்த போட்டி நவம்பர் 16ஆம் தேதி நிறைவடையும். நவம்பர் 16ம் தேதியும் மழை நிற்காமல் போட்டியை முடிக்கவில்லை என்றால், புள்ளிப்பட்டியலில் அதிகமாக இருக்கும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே, இந்திய அணி அதிகபட்சமாக 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. இந்த போட்டியில் டீம் இந்தியா வெற்றி பெற்றால் மொத்தம் 18 புள்ளிகள் கிடைக்கும், வெற்றி பெறாவிட்டாலும் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும். அதே சமயம் நியூசிலாந்து அணி மொத்தம் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. எனவே, ரிசர்வ் நாளில் கூட இந்த இரு அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால், இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

இரண்டாவது அரையிறுதிப் போட்டியிலும் மழை குறுக்கிட்டால் என்னவாகும் என்ற கேள்வி இப்போது உங்கள் மனதில் எழும். தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. போட்டி பாதியாகக் குறைக்கப்பட்டாலோ அல்லது மழையின் காரணமாக விளையாட முடியாமலோ இருந்தால், அந்த போட்டி ரிசர்வ் நாளில் அதாவது நவம்பர் 17ஆம் தேதி நிறைவடையும். ரிசர்வ் நாளில் கூட போட்டியின் முடிவு தெரியாவிட்டால், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 

எனவே, இதன்படி, தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு வரும். ஏனெனில் அது இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த இரு அணிகளும் தலா 14 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஆனால் தென்னாப்பிரிக்காவின் சிறந்த நிகர ரன் ரேட் காரணமாக, ஆஸ்திரேலியாவை விட மேலே உள்ளன. ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை அதிக வித்தியாசத்தில் வீழ்த்தி நம்பர்-2க்கு வர விரும்பியதற்கு இதுவே காரணம். ஆனால் அது நடக்கவில்லை.

இந்நிலையில், முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதிப் போட்டிகள் மழையால் கைவிடப்பட்டு, எந்த முடிவும் எட்டப்படாவிட்டால், நவம்பர் 19ஆம் தேதி இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
Embed widget