மேலும் அறிய

துபாயில் Champions Trophy? விடாபிடியாக இருக்கும் பிசிசிஐ.. பாகிஸ்தான் எடுத்த பிரம்மாஸ்திரம்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேற பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் அடுத்தாண்டு நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்தியா மறுத்துள்ள நிலையில், அந்த தொடரில் இருந்து வெளியேற பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியேறும் பாகிஸ்தான்:

இந்தியா பங்கேற்க மறுத்துள்ளதால் ஏற்படும் பொருளாதார இழப்பை காரணம் காட்டி பிசிசிஐ-க்கு எதிராக சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடைசியாக, கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. பின்னர் ஒரு சில காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்ட இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் என்று ஐசிசி ஏற்கனவே அறிவித்தது. ஆனால் ஐசிசியின் இந்த அறிவிப்புக்கு எதிராக பிசிசிஐ போர்க்கொடி தூக்கியது.

பாகிஸ்தான் இந்த தொடர் நடத்தப்பட கூடாது என்றும் பிசிசிஐ விரும்புவதாக அப்போதே தக்வல்கள் வெளியாகின. அப்படி பாகிஸ்தானில் இந்த தொடரை நடத்துவதை ஐசிசி விரும்பினால், இந்தியா விளையாடும் போட்டிகளை வேறு ஒரு நாட்டில் நடத்த முன் வர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. தனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவை விளையாட வைப்பதற்குப் பல படிகள் இறங்கி வந்தது.

உதாரணமாக பாகிஸ்தான் இந்தியா எல்லையில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய போட்டிகளை நடத்தலாம் எனவும் இந்திய அணியின் வீரர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் எனவும் கூறி வந்தது. ஆனால், தற்போது பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் வாரியம்), ஐசிசிக்கு (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கடிதம் எழுதி உள்ளது.

துபாயில் Champions Trophy?

அதாவது, நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அணி பாகிஸ்தான் மண்ணில் எந்த ஒரு போட்டியும் விளையாடாது எனவும் இந்திய அணியின் போட்டிகளைத் துபாய்க்கு மாற்றி வைக்க வேண்டும் எனவும் பிசிசிஐ, ஐசிசிக்கு  கோரிக்கை வைத்தது.

பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள பிசிசிஐ-க்கு இந்திய அரசு அனுமதி வழங்காத நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேற பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டியை நடத்தாமல் போனதால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை காரணம் காட்டி பிசிசிஐ-க்கு எதிராக சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாயில் நடத்த ஐசிசி திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2008ஆம் ஆண்டு, மும்பையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் விரிசல் அடைந்தது. குறிப்பாக, இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதை தவிர்த்து வருகிறது.

கடைசியாக, கடந்த 2012ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 2008ஆம் ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. மற்றபடி, ஐசிசி போட்டிகள் வழியாக மட்டுமே இரண்டு அணிகளும் மோதி கொள்கின்றன. 

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
Embed widget