மேலும் அறிய

Ashes 2023 2nd Test: போட்டியை தடுக்க முயன்ற போராட்டக்காரர்கள் - தூக்கிச்சென்று வெளியே தள்ளிய பேர்ஸ்டோவ்

Ashes 2023 2nd Test: இங்கிலாந்தில் எரிபொருளுக்கு எதிராக உள்ள ”ஸ்டாப் ஆயில்” இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது ஆஷஸ் போட்டியை தடுக்க முயற்சி செய்தனர்.

Ashes 2023 2nd Test:  இங்கிலாந்தில் எரிபொருளுக்கு எதிராக உள்ள ”ஸ்டாப் ஆயில்” இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது ஆஷஸ் போட்டியை தடுக்க முயற்சி செய்தனர். 

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸஷ் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே முடிந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.  

இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. போட்டி தொடங்கி முதல் ஓவர் வீசி முடிந்ததும், ரசிகர்கள் மத்தியில் இருந்த ஸ்டாப் ஆயில் இயக்கத்தைச் சேர்ந்த இருவர், மைதனத்திற்குள் நுழைந்து, மறைத்து வைத்திருந்த ஆரஞ்சு நிற பெயிண்ட் பவுடரை மைதானத்தில் வீசினர். இதனை மைதானத்தில் இருந்த இங்கிலாந்து அணி வீரர்களும், ஆஸ்திரேலிய அணி வீரர்களும் தடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களைக் கண்டுகொள்ளாத ஸ்டாப் ஆயில் இயத்தினர், பெயிண்ட் பவுடரை மைதானத்தில் வீசுவதை தொடர்ந்து செந்து வந்தனர். இதனால் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் ஸ்டாப் ஆயில் இயத்தைச் சேர்ந்த ஒருவரை தூக்கிக்கொண்டு மைதானத்திற்கு வெளியே சென்றார். அதன்பின் மைதானத்தில் இருந்த காவலர்கள் அவர்களைப் பிடித்துச்சென்றனர். 

ஸ்டாப் ஆயில் இயக்கத்தைச் சேர்ந்தவரை தூக்கிக்கொண்டு சென்றதால், பேரிஸ்டோவின் ஜெர்சி மற்றும் க்ளவுஸில் பெயிண்ட் பவுடர் ஆனதால், தனது ஜெர்ஸியை மாற்றச் சென்றார். தற்போது இந்த நிகழ்வு குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் போராட்டக்காரர்கள் இதற்கு முன்னர், சரசன்ஸ் மற்றும் சேல் இடையே ட்விகன்ஹாமில் நடந்த கல்லாகர் பிரீமியர்ஷிப் இறுதிப் போட்டியையும் நடத்த முடியாமல் செய்தனர். அதாவது, ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் டி-ஷர்ட் அணிந்த இரண்டு ஆண்கள் முதல் பாதியின் நடுவே ஆடுகளத்தை ஆக்கிரமித்து, பாதுகாப்பு ஊழியர்களால் அகற்றப்படுவதற்கு முன்பு ஆரஞ்சு பெயிண்ட்டை மைதானத்தில் வீசினர்.

அதேபோல், கடந்த ஏப்ரலில் நடந்த உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியின் போது க்ரூசிபிளில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் டி-ஷர்ட் அணிந்த ஒருவர் மேஜை ஒன்றின் மீது குதித்து, துணியின் மேல் ஆரஞ்சுப் பொடியைக் கொட்டியதால், ஜோ பெர்ரிக்கு எதிரான ராபர்ட் மில்கின்ஸ் போட்டி தடைபட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget