மேலும் அறிய

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது..பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சந்தோச மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்று, பிரகாரம் வந்து திருக்கோயில் சேர்தல் நடைபெறும்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது. 


திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது..பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
 

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு தோறும் நடைபெறும், இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். குறிப்பாக விழாவின் 6-ம் நாள் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் கந்த சஷ்டி விழா நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் வழக்கம் போல் முழுமையான பக்தர்கள் பங்கேற்புடன் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று துவங்கியது.


திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது..பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

முதல் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம் ஆகியவை நடைபெற்றது.காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அருள்மிகு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். தொடர்ந்து காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது.காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து அருள்மிகு ஜெயந்திநாதர் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்தலும், தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறுகிறது.


திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது..பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

இன்று சூரியகிரகணம் மாலை 5 மணி முதல் 6.15 மணி வரை நடைபெறுவதால் அன்று மாலை 4 மணிக்கு சுவாமிகளுக்கு பட்டு சாத்தி நடை சாத்தப்படும். பின்பு மாலை 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற காலங்கள் மற்றும் யாகசாலை பூஜை நடைபெறும். இரவு 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அருள்மிகு ஜெயந்திநாதருக்கு அபிஷேக, அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்தல் நடைபெறும்.

இரண்டாம் திருவிழாவான நாளை முதல் 5-ம் திருவிழாவான அக்டோபர் 29-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம் நடைபெறும். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி, பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து அருள்மிகு ஜெயந்திநாதர் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்தலும், தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும். மாலை 4 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அருள்மிகு ஜெயந்திநாதருக்கு அபிஷேக, அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்தல் நடைபெறும்.


திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது..பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்


6–ம் திருவிழாவான அக்டோபர் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறும்.காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி, பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து அருள்மிகு ஜெயந்திநாதர் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்தலும், தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும்.


திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது..பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

பிற்பகல் 2 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அருள்மிகு ஜெயந்திநாதருக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து மாலை 4 மணியளவில் ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில் எழுந்தருள்வார். பின்பு அங்கு சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சந்தோச மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்று, கிரிப்பிரகாரம் வந்து திருக்கோயில் சேர்தல் நடைபெறும். இரவு 108 மகாதேவர் சந்நிதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் முடிவுற்ற பின் சஷ்டி பூஜைத் தகடுகள் கட்டுதல் நடைபெறும்.

7-ம் திருவிழாவான அக்டோபர் 31-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,  காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மற்ற கால பூஜைகளும் தொடர்ந்து நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு நடைபெறும். மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும், இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறும்.


திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது..பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

கந்த சஷ்டி விழா நாளை தொடங்கவுள்ள நிலையில் திருச்செந்தூரில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த ஆண்டு உள்பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் தங்கி விரதமிருக்க கூடுதலாக தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் கடற்கரையில் மணலை சமன் செய்து கம்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனை தவிர தற்காலிக கழிப்பறை அமைத்தல், வாகன நிறுத்திமிடம் ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் (கூ.பொ) ம.அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், திருக்கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Embed widget