200 ஆண்டுக்கு மேலாக இந்துக்கள், இஸ்லாமியர்கள் சேர்ந்து கொண்டாடும் மொஹரம்
வாராப்பூர் கிராமத்தை பொறுத்தவரை இந்த மொஹரம் பண்டிகை தங்களது கிராம விழாவாகவும், சமூக மதநல்லிணக்க விழாவாகவும் கொண்டாடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த வாராப்பூர் எனும் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் இஸ்லாமியர் குடும்பங்கள் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வருகின்றன. இந்த வாராப்பூர் கிராமத்தில் மொஹரம் பண்டிகை இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்களும் இணைந்து நடத்துகின்றனர்.
இந்த கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் 3 இஸ்லாமியர் குடும்பங்கள் மட்டுமே வசித்தனர். தங்களது வாழ்வாதாரத்தை பார்த்துக்கொண்டு மொஹரம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாமல் தவித்த போது நாங்கள் இருக்கிறோம் சேர்ந்து கொண்டாடுவோம் என்று இந்துக்கள் தோள்கொடுத்தனர். அன்று முதல் பண்டிகைக்கு தேவையான செலவுகள், உதவிகள், ஒருங்கிணைப்புகள் என்று அனைத்தையும் இந்துக்கள் முன் வந்து நடத்தி இன்று வரை மொஹரம் பண்டிகையை ஊர் திருவிழாவாகவும் சமூகநல்லிணக்க விழாவாகவும் கொண்டாடி வருகின்றனர்.
#Sivagangai | சிங்கம்புணரி அருகே சமூக நல்லிணக்கம். 200 ஆண்டுகளுக்கு மேலாக மொகரம் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமியர்கள் இந்துக்கள் - ஆண்கள் பூ குழி இறங்கி நேர்த்தி கடன் !
— arunchinna (@arunreporter92) July 30, 2023
பெண்கள் தலையில் நெருப்பு கங்குகளை தலையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வினோத வழிபாடு !#abpnadu | @k_for_krish pic.twitter.com/rXrRA4ZWoc
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets