மேலும் அறிய

சீர்காழி திருத்தாளமுடையார் கோயில் சூரிய புஷ்கரணி விழா

சீர்காழி திருத்தாளமுடையார் கோயிலில் சூரிய புஷ்கரணி தீர்த்தவாரி, சூரியபகவானுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சி அளித்த ஐதீக  நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே  திருக்கோலக்காவில் தத்துவனிபிரதாம்பிகை உடனாகிய  தாளபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த கோயில் திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் பொற்தாளம்  வழங்கியதால் தாளபுரீஸ்வரர் எனவும், அதற்கு ஓசை வழங்கியதால் அம்மன் ஓசைநாயகி அம்மன் என அழைக்கப்படுகிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தீர்த்த குளத்தில் சூரிய பகவான் நீராடி சுவாமிகளோடு அருள் பாலித்த நிகழ்வு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை சூரிய புஷ்கரணி திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று இவ்விழாவானது நடைபெற்றது. 


சீர்காழி திருத்தாளமுடையார் கோயில் சூரிய புஷ்கரணி விழா

விழாவையொட்டி விநாயகப்பெருமான் சுவாமி, அம்பாள், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் புஷ்ப அலங்காரத்தில் காமதேனு, ரிஷப, மூஞ்சூர், மயில் ஆகிய வாகனங்களில் சூரிய புஷ்கரணிக்கு எழுந்தருளியினர். அங்கு சூரிய பகவானுக்கு தீர்த்தவாரி வழங்கும் ஐதீக நிகழ்வும், அதனை தொடர்ந்து சூரிய பகவான் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் இணைந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. இதில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாயியை தரிசனம் செய்தனர்.


சீர்காழி திருத்தாளமுடையார் கோயில் சூரிய புஷ்கரணி விழா

கோயில் வரலாறு:

சீர்காழி ஞானசம்பந்தர் குழந்தை பருவத்தில் ஞானப்பால் உண்டு சீர்காழியிலிருந்து தன் தந்தை சிவப்பாத இருதயரின் தோல் மேல் அமர்ந்து திருகோலாக்கா கோயில் வருகிறார். சீர்காழியில் ஞானப்பால் உண்ட பிறகு ஞானசம்பந்தர் வரும் முதல் கோயில் இதுதான். ஞானசம்பந்தர், சிவனை நினைத்து கைத்தாலமிட்டு பாடி வருகிறார். அப்பொழுது இதனை கவனித்த சிவபெருமான் இக்குழந்தைக்கு கை சிவந்து விடுமே என்ற எண்ணத்தில் பஞ்சாஷ்சங்கர மந்திரத்தை உபதேசித்து பவுன் தானம் அனுக்கிரகம் செய்கிறார். அந்த பொற்தாளத்திற்கு சத்தம் வராது. செப்பு வெண்கலம் என ஏதாவது வழங்கினால் தான் சத்தம் வரும். சிவன் பொன்னை வழங்கியதால் அதற்கு சத்தம் இல்லை. ஞானசம்பந்தர் பிறகு தேவாரத்தை பாடி கொண்டே அம்பாள் சன்னதிக்கு செல்கிறார்.


சீர்காழி திருத்தாளமுடையார் கோயில் சூரிய புஷ்கரணி விழா

அங்கு ஓசை கொடுத்த நாயகி அம்பாளிடம் பிரார்த்தனை செய்கிறார். அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஓசையை அனுகிரகம் செய்கிறார். இவருக்கு ஓசை வழங்கியதால் அம்பாளுக்கு ஓசை கொடுத்த நாயகி என பெயர் வந்தது. ஞான சம்பந்தருக்கு சிவன் தாளத்தை வழங்கியதால் தாளபுரீஸ்வரர் என பெயர் வந்தது. இந்நிகழ்வு ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 200 ஆண்டுகளுக்குப் பின் 9 -ஆம் நூற்றாண்டில் ஞானசம்பந்தருக்கு தாளம் வழங்கியதை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளார். 1979-ம் ஆண்டு நாகர்கோவில் அருகில் உள்ள இருள கோபுரம் என்னும் ஊரில் ஒரு தம்பதிக்கு ஆண் வாரிசு பிறந்து 7 வயது வரை பேச்சு வரவில்லை. அக்குழந்தையின் தந்தை ஒரு மருத்துவர்.


சீர்காழி திருத்தாளமுடையார் கோயில் சூரிய புஷ்கரணி விழா

அவர் சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் என அனைத்திலும் முயற்சி செய்தும் ஒரு பயனும் இல்லை. அக்குழந்தை அம்மா என்று கூட அழைக்கவில்லை. தன் மகனை நினைத்து சோகத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் அவர் வீட்டிற்கு ஒரு பெரியவர் வருகிறார். அவர் சீர்காழியில் இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்பாளின் வரலாற்றை பற்றி அறிந்தவர்.அப்பெரியவரிடம் தன் குழந்தையை பற்றி கூறி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் குழந்தையின் தந்தை. அப்போது பெரியவர் திருக்கோலாக்கா கோயில் பற்றி கூறி ஜடப்பொருளான தாளத்துக்கே ஓசை தரும் போது உன் மகனுக்கு பேச்சு தர மாட்டாரா? எனக்கூறி ஓசை கொடுத்த நாயகி அம்மனை பிரார்த்திக்க சொல்கிறார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த குழந்தையின் தாயார் உடனே பூஜை அறைக்கு சென்று ஒரு தீபம் ஏற்றி கையில் இருந்த தங்க வளையல் ஒன்றை கழற்றி ஓசை கொடுத்த நாயகி அம்மனை நினைத்து வேண்டினார். 


சீர்காழி திருத்தாளமுடையார் கோயில் சூரிய புஷ்கரணி விழா

அந்த நாளுக்கு மறுநாள் காலை அந்த குழந்தை அம்மா என்று அழைத்தவாரே அவர்களிடம் ஓடி வந்தது. இதை கண்டு குழந்தையின் பெற்றோர் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். நேற்று வரை பேசா குழந்தை இன்று அம்மன் அருளால் பேசத் தொடங்கியது என மகிழ்ந்தனர். பிறகு அம்பாளுக்கு பவுனில் தாளம் செய்து கொடுத்தனர். இன்னும் இக்கோயிலில் அத்தாலம் உள்ளது. திருமுலைப்பால் விழா அன்று ஒரு நாள் மட்டும் தாளத்தை இறைவனிடம் வைத்து பூஜிக்கப்படும். அக்குழந்தை பேசத் தொடங்கிய நாளில் இருந்து 3 வயது முதல் 80 வயது உடையோர் வரை சுமார் 1,800 நபருக்கு மேல் அக்கோயிலுக்கு வந்து பேசும் திறன் கிடைத்தாக சொல்லப்படுகிறது. பிறவி ஊமை, அதிர்ச்சியில் பேச்சு நின்றவர், திக்கி பேசுபவர்கள் என இங்கு வந்து மூலமந்திர அர்ச்சனை, வாங்குவாது, மூல மந்திர தர்ஷினி அர்ச்சனை வாங்குவான், மூல மந்திர ஹோமம் என மூன்று விதமான பூஜைகளில் ஏதேனும் ஒரு பூஜை செய்து அம்பாளுக்கு நெய்வேத்தியம் செய்து தரும் தேனை 45 நாட்கள் பருகி வர வேண்டும்.பிறகு பேச்சுத் திறன் நன்றாக வந்தவுடன் கடவுளுக்கு பட்டு வஸ்திரம் உடுத்தி பிராத்தனை நிறையவே செய்வார். 


சீர்காழி திருத்தாளமுடையார் கோயில் சூரிய புஷ்கரணி விழா

ஞானசம்பந்தருக்கு பொற்தாலம் வழங்கியதால் திருத்தாளமுடையார் கோயில் என பெயரும் உண்டு. இக்கோயிலின் மூர்த்தி சப்தபுரீஸ்வரர், தத்துவனிபிரதாம்பிகை ஆவர். இங்கு உள்ள தீர்த்தம் ஆனந்த சூரிய புஷ்கரணி தீர்த்தம். ஸ்தல விருக்க்ஷம் - கொன்றை மரம். ஏழாம் நூற்றாண்டு ஞானசம்பந்தர் வருவதற்கு முன் இந்த இடம் கொன்றை வனமாக இருந்தது. கொன்றை வனநாதர் உண்ணாமுலை அம்மன் என முன்பு பெயர் இருந்தது. ஞானசம்பந்தர் வருகை புரிந்த நிகழ்வுக்குப் பின் சப்தபுரீஸ்வரர் என பெயர் மாறியது. மகாலட்சுமிக்கு வரம் கொடுத்த ஸ்தலமும் இதுதான். திருமணமாகாத பெண் இங்கு வந்து ஸ்யும்ரகலா மூல மந்திர அர்ச்சனை செய்து வேண்டினால் நல்ல வரன் அமையும். சூரிய தோஷம் நிவர்த்தி ஸ்தலமாகவும் திகழ்கிறது. கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை இங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபடுவது மிகவும் விசேஷம். ஏனெனில் கார்த்திகை ஞாயிற்று சூரிய பகவானுக்கு இறைவன் காட்சியளித்த காரணமாக கார்த்திகையில் ஒவ்வொரு ஞாயிறு தீர்த்தவாரி நடைபெறும். ஞானப்பால் உண்டு வந்த முதல் கோயில் என்பதால் ஞானப்பால் உற்சவம் சீர்காழியில் நடக்கும். அன்றே இங்கு பொற்தாளம் மிகவும் விசேஷமாக நடைபெறும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்தி ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்தி ட்ரம்ப்; பெரும் பதற்றம்
CM Stalin on TAPS: புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்தி ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்தி ட்ரம்ப்; பெரும் பதற்றம்
CM Stalin on TAPS: புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pesnison Scheme: பழைய ஓய்வூதியம் Vs தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் - வித்தியாசம் என்ன? ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
TN Govt Pesnison Scheme: பழைய ஓய்வூதியம் Vs தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் - வித்தியாசம் என்ன? ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Embed widget