மேலும் அறிய

மயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம் வைபவம் - திருவாவடுதுறை மடாதிபதி பங்கேற்று வழிபாடு

மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான மயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது.

மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான மயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற பெருமைக்குரிய கோயிலாகும். பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த பெருமைக்குரிய தலமாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும்.  இத்தகைய பல்வேறு சிறப்புக்குரிய இக்கோயிலில் கடைசியாக கடந்த 2005 -ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


மயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம் வைபவம் - திருவாவடுதுறை மடாதிபதி பங்கேற்று வழிபாடு

இதனைத்தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திருவாவடுதுறை ஆதீனம் முடிவெடுத்து திட்டமிடப்பட்டு 2022 -ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது கோயில் முழுவதும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவுற்று  மகா கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து கடந்த புதன்கிழமை  123 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக  கங்கை, யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் மயிலாடுதுறைக்கு  கொண்டுவரப்பட்டு துலாக்கட்ட காவிரியில் இருந்து யானை மீது அவற்றை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து ஆலயம் வந்தடைந்தது.


மயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம் வைபவம் - திருவாவடுதுறை மடாதிபதி பங்கேற்று வழிபாடு

புனிதநீர் அடங்கிய கடங்களில் கருவறையில் உள்ள சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் ஆவாகனம் செய்யப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்து வந்து யாகசாலையில் பிரவேசம் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிவநெறி சொற்பொழிவுகள், இன்னிசை மற்றும் பரதநாட்டிய கச்சேரி, 82 மணி நேரம் தொடர்ச்சியாக அகண்ட பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.


மயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம் வைபவம் - திருவாவடுதுறை மடாதிபதி பங்கேற்று வழிபாடு

தொடர்ந்து நேற்று காலை எட்டாம் கால யாகசாலை பூஜை திருவாவடுதுறை ஆதீனம் 24 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர், மகாபூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்துனர். அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை  நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தை மயிலாடுதுறை  மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


மயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம் வைபவம் - திருவாவடுதுறை மடாதிபதி பங்கேற்று வழிபாடு

தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து , மயூரநாதர் அவையாம்பாள் திருக்கல்யாணம் நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. மயூரநாதர், அவையாம்பிகையுடன், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, பெண்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர். சிவாச்சாரியார், வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன 24 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


மயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம் வைபவம் - திருவாவடுதுறை மடாதிபதி பங்கேற்று வழிபாடு

பின்னர் திருமண கோலத்தில்  மாயூரநாதர் - அவையாம்பிகையுடன் விநாயகர், முருகன், சண்டிகேஷ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் 3 புஷ்ப பல்லக்கில் ப்கதர்களுக்கு காட்சி தந்து திருவீதியுலா நடைபெற்றது. சிவன், விநாயகர், வேல் போன்று பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 3 புஷ்ப பல்லக்குகளில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டது. யானை அபயாம்பிகை முன்னே செல்ல சிவகைலாய வாத்தியங்கள் அதிர 20 நாதஸ்வர தவில்வித்வான்களின் மேளதாள வாத்திய கச்சேரிகளுடன் சிறப்பாக நடைபெற்ற திருவீதியுலாவில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபட்டனர். ஏராளமானோர் திருமண கோலத்தில் வந்த மாயூரநாதர் அபயாம்பிகை உள்ளிட்ட பஞ்சமுர்த்திகளை தரிசனம் செய்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பக்தர்களின் ‘ஓம் சக்தி’ கோஷம்! காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தங்கத்தேர் உற்சவம்!
பக்தர்களின் ‘ஓம் சக்தி’ கோஷம்! காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தங்கத்தேர் உற்சவம்!
ஆடி வெள்ளி... அம்மன் அருள் பொங்கும் புனித நாட்கள்! சிறப்புகள் என்ன?
ஆடி வெள்ளி... அம்மன் அருள் பொங்கும் புனித நாட்கள்! சிறப்புகள் என்ன?
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
அகத்திய முனிவருக்கு சிவன் திருக்கல்யாணக் காட்சி தந்த புனிதத்தலம் எங்கிருக்கு தெரியுங்களா?
அகத்திய முனிவருக்கு சிவன் திருக்கல்யாணக் காட்சி தந்த புனிதத்தலம் எங்கிருக்கு தெரியுங்களா?

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Embed widget