மேலும் அறிய

தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர், குத்தாலம் ஆதிகேசவ பெருமாள் கோயில்களின் குடமுழுக்கு விழா..! பரவசத்தில் பக்தர்கள்...!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற சிவன் மற்றும் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் மற்றும் குத்தாலம் ஆதிகேசவ பெருமாள் கோயில்களில் வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையும் பிரசித்திபெற்றதுமான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சௌந்தரநாயகி சமேத வேதபுரீஸ்வரர் திருக்கோயில். அகத்திய மாமுனிவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி செய்த சிறப்புக்குரிய இத்தலத்தில், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முன்னோர்களுக்கு 16-ஆம் நாள் காரியம் செய்யத் தவறியவர்கள் சாந்தி ஹோமம் செய்து இக்கோயிலில் உள்ள சிவனையும் அம்பாளையும் தரிசித்து 16 முறை சுற்றிவர 21 தலைமுறை தோஷ நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். 


தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர், குத்தாலம் ஆதிகேசவ பெருமாள் கோயில்களின் குடமுழுக்கு விழா..! பரவசத்தில் பக்தர்கள்...!!

திருப்பணி

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் குடமுழுக்கு செய்ய அக்கிராம மக்கள் முடிவெடுத்து இந்து சமய அறநிலையத் துறையினருடன் இணைந்து அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டனர். அதனைத் அடுத்து கோயில் கட்டடங்கள் புதுப்பித்தல், புதிய கட்டங்கள் மற்றும் சிலை வடித்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட கோயிலின் திருப்பணிகளை செய்யப்பட்டு, குடமுழுக்கான பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து கோயில் கும்பாபிஷேகத்திற்கான நாள் குறிக்கப்பட்டது.

யாகசாலை பூஜைகள் 

தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக தினமான இன்று காலை 4 -ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகா பூர்ண குதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். 


தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர், குத்தாலம் ஆதிகேசவ பெருமாள் கோயில்களின் குடமுழுக்கு விழா..! பரவசத்தில் பக்தர்கள்...!!

புனிதநீர் ஊற்றல்

தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்தில் புனித நீர் வார்த்து மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்வை கண்டு தரிசனம் செய்தனர். 

திருத்துருத்தி செங்கமல தாயார் உடனாசிய ஆதிகேசவ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்.

இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் திருத்துருத்தி (எ) குத்தாலத்தில் மிக பழமையான பிரசித்தி பெற்ற செங்கமல தாயார் உடனாகிய ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு, புனித நீர் கடங்களை யாகசாலையில் வைத்து, பட்டாச்சாரியார்கள் யாக குண்டம் அமைத்து, வேத மந்திரங்கள் ஓதி நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. நான்காம் கால பூஜை முடிவில் பூர்ணா குதி செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. 


தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர், குத்தாலம் ஆதிகேசவ பெருமாள் கோயில்களின் குடமுழுக்கு விழா..! பரவசத்தில் பக்தர்கள்...!!

கோயில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 

அதனைத் தொடர்ந்து யாகசாலை வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார் தலையில் சுமந்து வேத மந்திரங்கள் முழங்க, மேல தாளங்கள் மல்லாரி வாசிக்க கடம்புறப்பாடு நடைபெற்று. புனிதநீர் அடங்கிய கடங்களை தலைமையில் சுமந்து கோயில் சுற்றி வலம் வந்து, கோயில் கோபுர கலசங்களை பட்டாச்சாரியார்கள்அடைந்தனர். அங்கு பட்டாச்சாரியார் நான்கு வேதங்களை ஓதி, கடங்களில் உள்ள புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இந்த கும்பாபிஷேக நிகழ்வை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒருசேர கோவிந்தா கோவிந்தா முகங்க கும்பாபிஷேகத்தை கண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Women Self Help Group: பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
Embed widget