கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் பூந்தேர் திருவீதி உலா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
கரூர் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர் திருவீதி விழா காட்சி தருகிறார்.
தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத திருவீதி உலாவில் சுவாமி பூந்தேரில் காட்சியளித்தார்.
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர் திருவீதி விழா காட்சி தருகிறார். இந்நிலையில் நடைபெற்ற உற்சவர் திருவீதி உலாவில் பூந்தேரில் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி திருவீதி உலா காட்சியளித்தார். ஆலயத்திலிருந்து மேள தாளங்கள் புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா ஆலய முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. புரட்டாசி மாத சுவாமி திருவீதி உலாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள் , சந்தனம் , அபிஷேக பொடி, அரிசி மாவு ,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அணிவித்து வெள்ளி கவசம் சாத்தப்பட்ட பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக குடியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets