மேலும் அறிய

Karthigai Deepam 2024: உலக அமைதி வேண்டி 2025 அகல் விளக்குகள் ஏற்றி ஆரோவில்லில் வழிபாடு

Karthigai Deepam 2024: உலக அமைதி வேண்டி 2025 அகல் விளக்குகள் ஏற்றி ஆரோவில்லில் வழிபாடு.

விழுப்புரம்: ஆரோவில்லில் தீப திருநாளையொட்டியும், உலக அமைதி வேண்டியும் 2025ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி 2025 அகல் விளக்கு தீப வழிபாட்டில் ஏராளமான வெளிநாட்டினர் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் மோகன கலாசார மையம் அமைந்துள்ளது. இங்கு உலக அமைதி வேண்டியும், தீப திருநாளை முன்னிட்டும் 2025 அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். வழிபாட்டில், 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், உள்ளூர் வாசிகள் பங்கேற்று தியானத்தில் ஈடுப்பட்டனர். இது குறித்து மோகன கலாசார மைய நிர்வாகி பாலசுந்தரம் கூறுகையில், உலகில் அமைதி, ஒற்றுமை நிலவ வேண்டும்.

அனைவருக்கும் நன்மை நடக்க வேண்டும் என்பதற்காகவும், வரும் 2025ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி, 2025 அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நிகழ்ச்சி நடந்தது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டினர் கூறுகையில், தீபம் வழிபாடு எங்களுக்கு ஆன்மிக ரீதியான ஒரு புதிய அனுபவத்தையும், மனதில் அமைதியான நிலையை ஏற்படுத்திகிறது என்றனர்.

திருவண்ணாமலையில் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபம்

கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபத்திருவிழாவே ஆகும். கார்த்திகை தீபத் திருவிழா தமிழ்நாட்டிலே சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும்.

அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்:

கார்த்திகை மாதம் பிறந்தது முதலே திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 4ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. தீபத் திருவிழா தொடங்கிய ஒவ்வொரு நாளும் திருவண்ணாமலை சாமி உற்சவம், மகா தேரோட்டம்  என விழாக்கோலம் பூண்டது.

இந்த நிலையில், தீபத் திருவிழாவின் மிக மிக முக்கியமான நாளான கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் என்றாலே அதிகாலையிலே அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதன்படி, இன்று அதிகாலை 3.30 மணிக்கு அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.

மாலையில் மகா தீபம்:

இன்று கார்த்திகை தீபம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை பாதிக்கப்பட்டபோதிலும் பக்தர்கள் கூட்டம் சிறிதும் குறையவில்லை. கோயிலில் இன்று பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மாலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

மலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். ஆனால், மண் சரிவு, கனமழை அபாயம் உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் இந்த முறை மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி தந்ததன் காரணமாகவே திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று காலையே மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள்: 

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகே பக்தர்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றுவது வழக்கம். 2 ஆயிரத்து 688 அடி உயரம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை நேரில் தரிசிக்க, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாதீபம் முழுக்க முழுக்க நெய்யில் நனைக்கப்பட்ட திரியால் ஏற்றப்படுவது வழக்கம். தீபம் ஏற்றுவதற்காக அதிகளவிலான காடாத்துணி மற்றும் நெய் பயன்படுத்தப்படுவது ஆண்டுதோறும் வழக்கம்.

மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் இன்று ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை காண பக்தர்கள் வரும் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது. சுமார் 35 லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் ஆயிரக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி, கோவை என தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மட்டுமின்றி மற்ற சிவாலயங்களிலும் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மேலும், கார்த்திகை தீபம் முருகப்பெருமான் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால் முருகப்பெருமான் கோயில்களிலும் கார்த்திகை தீபம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் அதிகளவு குவியும் கோயில்களில் வழக்கத்தை விட அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget