மேலும் அறிய

Karthigai Deepam 2024: உலக அமைதி வேண்டி 2025 அகல் விளக்குகள் ஏற்றி ஆரோவில்லில் வழிபாடு

Karthigai Deepam 2024: உலக அமைதி வேண்டி 2025 அகல் விளக்குகள் ஏற்றி ஆரோவில்லில் வழிபாடு.

விழுப்புரம்: ஆரோவில்லில் தீப திருநாளையொட்டியும், உலக அமைதி வேண்டியும் 2025ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி 2025 அகல் விளக்கு தீப வழிபாட்டில் ஏராளமான வெளிநாட்டினர் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் மோகன கலாசார மையம் அமைந்துள்ளது. இங்கு உலக அமைதி வேண்டியும், தீப திருநாளை முன்னிட்டும் 2025 அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். வழிபாட்டில், 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், உள்ளூர் வாசிகள் பங்கேற்று தியானத்தில் ஈடுப்பட்டனர். இது குறித்து மோகன கலாசார மைய நிர்வாகி பாலசுந்தரம் கூறுகையில், உலகில் அமைதி, ஒற்றுமை நிலவ வேண்டும்.

அனைவருக்கும் நன்மை நடக்க வேண்டும் என்பதற்காகவும், வரும் 2025ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி, 2025 அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நிகழ்ச்சி நடந்தது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டினர் கூறுகையில், தீபம் வழிபாடு எங்களுக்கு ஆன்மிக ரீதியான ஒரு புதிய அனுபவத்தையும், மனதில் அமைதியான நிலையை ஏற்படுத்திகிறது என்றனர்.

திருவண்ணாமலையில் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபம்

கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபத்திருவிழாவே ஆகும். கார்த்திகை தீபத் திருவிழா தமிழ்நாட்டிலே சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும்.

அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்:

கார்த்திகை மாதம் பிறந்தது முதலே திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 4ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. தீபத் திருவிழா தொடங்கிய ஒவ்வொரு நாளும் திருவண்ணாமலை சாமி உற்சவம், மகா தேரோட்டம்  என விழாக்கோலம் பூண்டது.

இந்த நிலையில், தீபத் திருவிழாவின் மிக மிக முக்கியமான நாளான கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் என்றாலே அதிகாலையிலே அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதன்படி, இன்று அதிகாலை 3.30 மணிக்கு அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.

மாலையில் மகா தீபம்:

இன்று கார்த்திகை தீபம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை பாதிக்கப்பட்டபோதிலும் பக்தர்கள் கூட்டம் சிறிதும் குறையவில்லை. கோயிலில் இன்று பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மாலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

மலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். ஆனால், மண் சரிவு, கனமழை அபாயம் உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் இந்த முறை மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி தந்ததன் காரணமாகவே திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று காலையே மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள்: 

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகே பக்தர்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றுவது வழக்கம். 2 ஆயிரத்து 688 அடி உயரம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை நேரில் தரிசிக்க, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாதீபம் முழுக்க முழுக்க நெய்யில் நனைக்கப்பட்ட திரியால் ஏற்றப்படுவது வழக்கம். தீபம் ஏற்றுவதற்காக அதிகளவிலான காடாத்துணி மற்றும் நெய் பயன்படுத்தப்படுவது ஆண்டுதோறும் வழக்கம்.

மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் இன்று ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை காண பக்தர்கள் வரும் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது. சுமார் 35 லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் ஆயிரக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி, கோவை என தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மட்டுமின்றி மற்ற சிவாலயங்களிலும் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மேலும், கார்த்திகை தீபம் முருகப்பெருமான் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால் முருகப்பெருமான் கோயில்களிலும் கார்த்திகை தீபம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் அதிகளவு குவியும் கோயில்களில் வழக்கத்தை விட அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
திமுக-வில் இணைந்தார் மைத்ரேயன்.. அதிமுக-வுக்கு குட்பை.. காலியாகும் முன்னாள் எம்பிக்கள்!
திமுக-வில் இணைந்தார் மைத்ரேயன்.. அதிமுக-வுக்கு குட்பை.. காலியாகும் முன்னாள் எம்பிக்கள்!
’’இது எங்க அறிக்கையே இல்ல’’ என்னதான் நடந்தது மாநில கல்விக் கொள்கையில்? குமுறும் கல்வியாளர்கள்!
’’இது எங்க அறிக்கையே இல்ல’’ என்னதான் நடந்தது மாநில கல்விக் கொள்கையில்? குமுறும் கல்வியாளர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்
Poompuhar Vanniyar Womens Conference | ராமதாஸ் பின்னணியில் திமுக? பூம்புகாரில் பலப்பரீட்சை
Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
திமுக-வில் இணைந்தார் மைத்ரேயன்.. அதிமுக-வுக்கு குட்பை.. காலியாகும் முன்னாள் எம்பிக்கள்!
திமுக-வில் இணைந்தார் மைத்ரேயன்.. அதிமுக-வுக்கு குட்பை.. காலியாகும் முன்னாள் எம்பிக்கள்!
’’இது எங்க அறிக்கையே இல்ல’’ என்னதான் நடந்தது மாநில கல்விக் கொள்கையில்? குமுறும் கல்வியாளர்கள்!
’’இது எங்க அறிக்கையே இல்ல’’ என்னதான் நடந்தது மாநில கல்விக் கொள்கையில்? குமுறும் கல்வியாளர்கள்!
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: மேயர் கணவர் கைது செய்யப்பட்டநிலையில்.. மருத்துவமனையில் அனுமதி !
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: மேயர் கணவர் கைது செய்யப்பட்டநிலையில்.. மருத்துவமனையில் அனுமதி !
USA India: ”நாங்க மட்டும் இல்லைன்னா” இந்தியாவை வெறுப்பேற்றி பார்க்கும் அமெரிக்கா.. பாக்., உடனான உறவு
USA India: ”நாங்க மட்டும் இல்லைன்னா” இந்தியாவை வெறுப்பேற்றி பார்க்கும் அமெரிக்கா.. பாக்., உடனான உறவு
கூலியை ஆகஸ்ட் மாசம் ரிலீஸ் செய்வது ஏன்? ரஜினிக்கு இப்படி ஒரு ராசியா..! ஆபத்தும் இருக்கு!
கூலியை ஆகஸ்ட் மாசம் ரிலீஸ் செய்வது ஏன்? ரஜினிக்கு இப்படி ஒரு ராசியா..! ஆபத்தும் இருக்கு!
Accident: கொடூரம்.. 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பேர் பலி - கோயிலுக்கு சென்று திரும்பியபோது கோர விபத்து
Accident: கொடூரம்.. 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பேர் பலி - கோயிலுக்கு சென்று திரும்பியபோது கோர விபத்து
Embed widget