மேலும் அறிய

Navratri 2024: களைகட்டிய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்.. படையெடுக்கும் பக்தர்கள்..

Kanchipuram Navaratri: " ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தேவி தாயாருடன், காளிங்க நர்த்தன திருக்கோலத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளி பக்தர்களுக்கு காட்சியளித்த வரதராஜ பெருமாள் "

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவ விழாவை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தேவி தாயாருடன், காளிங்க நர்த்தன திருக்கோலத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளி பக்தர்களுக்கு காட்சியளித்த வரதராஜ பெருமாளை பக்தர்கள் வணங்கி சென்றனர்.

நவராத்திரி விழா 2024

இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி உள்ளது. நவராத்திரி பண்டிகையாக வட இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டில் நவராத்திரியின் கடைசி நாள் ஆயுத பூஜையாகவும், அதற்கு அடுத்த நாள் விஜயதசமியாகவும் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் நவராத்திரி தினத்தன்று, கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதேபோன்று தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு முக்கிய கோோயில்களில், நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.


Navratri 2024: களைகட்டிய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்.. படையெடுக்கும் பக்தர்கள்..

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நவராத்திரி விழா

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் அக்டோபர் 2ம் தேதி முதல் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

நவராத்திரி உற்சவத்தின் 5ம் நாளில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயாருக்கு, சிறப்பு திருமஞ்சனங்கள் செய்யப்பட்டு, அரக்கு கரை வெண் நிற பட்டு உடுத்தி,வைர, வைடூரிய, திருவாபரணங்கள் அணிவித்து மல்லிகைப்பூ, மனோரஞ்சிதப்பூ, பஞ்சவர்ண பூ மாலைகள்,சூட்டி சிறப்பு அலங்காரத்தில் காளிங்க நர்த்தன திருக்கோலத்தில் எழுந்தருளினார்.

பத்தி பரவசத்தில் பக்தர்கள்

ஸ்ரீதேவி,பூதேவி, பெருந்தேவி தாயாருடன், மேளதாளங்கள், முழங்க கோவில் வளாகத்தில் உலா வந்து, நூற்றுக்கால் மண்டபத்திற்கு வரதராஜ பெருமாள் எழுந்தருளி, நாதஸ்வர இசை ஒலிக்க ஊஞ்சல் சேவை கண்டு அருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 


Navratri 2024: களைகட்டிய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்.. படையெடுக்கும் பக்தர்கள்..

பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் தேவியர்களுடன் எழுந்தருளி தேவாதி ராஜனாக காட்சியளித்த, வரதராஜ பெருமாளுக்கு வேதபாராயண கோஷ்டியினர் வேத மந்திரங்களை பாட தூப தீப ஆராதனைகள்செய்யப்பட்டது. நூற்றுக்கால் மண்டபத்தில் காட்சி அளித்த வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் கூடி நின்று சுவாமி தரிசனம் செய்து வணங்கி, தீர்த்தம்,சடாரி, பிரசாதங்களை பெற்றுச் சென்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ( Kanchipuram Varadharaja Perumal Temple)

வைணவத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய கோயில்களுக்கு அடுத்ததாக சிறப்பு வாய்ந்த கோயிலாக பார்க்கப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில், 31 வது திவ்யதேசம் கோயிலாக உள்ளது. இக்கோயிலின் மூலவராக , தேவராஜ பெருமாள் - தாயார் சன்னதியில் பெருந்தேவி தாயார் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். உற்சவராக பேரருளாளன் உள்ளார்.

அத்திகிரி 

வரதராஜ பெருமாள் கோயில் சன்னதி அமைந்துள்ள இடம் அத்திகிரி என அழைக்கப்படுகிறது. மலை மீது காட்சி தருவதால் மூலவருக்கு மலையாளன் பெயரும் உண்டு. மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோவிலில் நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார். 


Navratri 2024: களைகட்டிய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்.. படையெடுக்கும் பக்தர்கள்..

நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் வரதராஜ பெருமாளை தரிசிக்க வேண்டும் 24 படிகள் ஏறி செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் பிற வைணவ கோயில்களில், எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிப்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.‌

தலைப்பு செய்திகள்

பாவம் போக்கி வாழ்வளிக்கும்... மனக்குழப்பம் தீர்க்கும், கடன் சுமை தீர்த்து அமைதி தரும் பாபநாசம் சிவஸ்தலம்
பாவம் போக்கி வாழ்வளிக்கும்... மனக்குழப்பம் தீர்க்கும், கடன் சுமை தீர்த்து அமைதி தரும் பாபநாசம் சிவஸ்தலம்
பக்தர்களுக்காக தலைசாய்த்த பெருமாள்... கரூரின் தென்திருப்பதியான தான்தோன்றிமலையில் குவியும் பக்தர்கள்!
பக்தர்களுக்காக தலைசாய்த்த பெருமாள்... கரூரின் தென்திருப்பதியான தான்தோன்றிமலையில் குவியும் பக்தர்கள்!
வேண்டுதல் நிறைவேறினால் சிமெண்ட் பொம்மை நேர்த்திக்கடன்... 3,000-க்கும் மேற்பட்ட சிலைகளால் புகழ் பெற்ற அழகு முத்து அய்யனார் கோயில்!
வேண்டுதல் நிறைவேறினால் சிமெண்ட் பொம்மை நேர்த்திக்கடன்... 3,000-க்கும் மேற்பட்ட சிலைகளால் புகழ் பெற்ற அழகு முத்து அய்யனார் கோயில்!
ஒரே தீபம்… பல விதமான பலன்கள்! எந்த திரி என்ன அதிசயம் செய்கிறது? அதிர விடும் ஆன்மிக ரகசியங்கள்
ஒரே தீபம்… பல விதமான பலன்கள்! எந்த திரி என்ன அதிசயம் செய்கிறது? அதிர விடும் ஆன்மிக ரகசியங்கள்

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
TVK Government : ‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ பரபரப்பு தகவலை வெளியிட்ட திமுக..!
‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ தகவலை வெளியிட்ட திமுக..!
Diesel Hatchback: நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
Onam festival Special Train : 100 சிறப்பு ரயில்.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு குஷி- எங்கிருந்து எங்கே.? ரயில்வே அமைச்சர் அதிரடி
100 சிறப்பு ரயில்.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு குஷி- எங்கிருந்து எங்கே.? ரயில்வே அமைச்சர் அதிரடி
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Crime: திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
Embed widget