மேலும் அறிய

கந்தபுராணம் அறங்கேறிய காஞ்சி குமரகோட்டம்‌ சுப்பிரமணிய‌ சுவாமி கோயில் கந்தசஷ்டி பெருவிழா‌

வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளிய ஆறுமுகம் கொண்ட சண்முக பெருமான் நான்கு ராஜவீதிகள் திருவீதிஉலா

புகழ்பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி பெருவிழாவானது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி முக்கிய நிகழ்வான 6-ஆம் நாள் சூரசம்ஹார விழா இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கந்தசஷ்டி விழாவின் 6-ஆம் நாள் கந்தசஷ்டி விழாவினையொட்டி மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளானது நடைபெற்று தொடர்ந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதனைதொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சியம்மினிடம் வேல் வாங்கும் நிகழாவானது நடைபெற்று ஆறுமுகம் கொண்ட சண்முகபெருமானுக்கு‌ மாலை அபிஷேக ஆராதனையானது நடைபெற்று முழுவதும் வண்ண வண்ண மலர்களினால் அலங்கரிக்கப்பட்டு இரவு நான்கு ராஜவீதிகள் வீதிஉலாவானது நடைபெற்றது.

கந்தபுராணம் அறங்கேறிய காஞ்சி குமரகோட்டம்‌ சுப்பிரமணிய‌ சுவாமி  கோயில்  கந்தசஷ்டி பெருவிழா‌
 
இதனைதொடர்ந்து சூரபத்மன்‌ சண்முகபெருமானுடன் போர்தொடுத்து அதில் மாமரமாக மாறிய மாயவித்தைகாரனான சூரபத்மனை சண்முக பெருமான் அன்னையிடம் பெற்ற வேல் கொண்டு பக்தர்களின் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்திற்கிடையே வதம் செய்யும் நிகழ்வுகளானது தத்ரூபமாக நடத்தப்பட்டது. இந்த சூரபத்மன் வதத்தில் ஒருபுறம் சேவலாகவும், மற்றொருபுறம் மயிலாகவும் ஆட்கொண்டார். இதனையொட்டி கண்கவர் வானவேடிக்கைகளும் நடைபெற்றது. பின்னர் சண்முகருக்கு தூப,தீப ஆராதனைகளானது விண்ணை முட்டும் அளவிற்கு அரோகரா, சரவண கோஷங்கள் முழக்கத்துடன் நடைபெற்று ஆனந்தமாய் நடனமாடியபடி திருக்கோவில் மண்டபத்தில் எழுந்தருளித்த சண்முகருக்கு கிலோ கணக்கில் பல்வேறு மலர்கள் கொண்டு ஆராதிக்கப்பட்டது.
கந்தபுராணம் அறங்கேறிய காஞ்சி குமரகோட்டம்‌ சுப்பிரமணிய‌ சுவாமி  கோயில்  கந்தசஷ்டி பெருவிழா‌
 
இந்த கந்தசஷ்டி கடைசி நாள் விழாவையொட்டி காலை‌முதலே உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளனோர் வந்திருந்து திருக்கோவில் பிரகாரத்தினை 108 சுற்றுகள் வலம் வந்திருந்து ஆயிர கணக்கான மக்கள் வெள்ளத்தில் சூரசம்ஹார விழாவானது நடைபெற்றது. இவ்விழாவினையொட்டி திருக்கோவில் நிர்வாக தரப்பில் தண்ணீர் போன்ற முன்னோற்பாடுகளும்,காவல்துறை தரப்பில் எவ்வித குற்றநிகழ்வுகளும்,அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு 50-க்கும் மேற்பட்ட சீருடை மற்றும் சீருடை அல்லாத போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 

 
தல வரலாறு
 
மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்புக் கோலமூர்த்தியாகக் காட்சி தருகிறார். பிரமனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் குட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி. முருகப்பெருமானை கவனியாது அலட்சியம் செய்த பிரமனிடம் தர்க்கம் (சண்டை) செய்ய; அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரமனை சிறைப் பிடிக்கிறார் முருகன். விடுவிக்க கோரி ஈசனின் கட்டளையை எடுத்துரைத்த நந்தி தேவனையும் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் நேரில் சென்று எடுத்துரைத்து பிரமனை விடுவிக்க செய்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிப்பட்டார். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது மூலத்தில் அறியப்பட்டது.
 
பிரளய பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்களெல்லாம் எங்கே போயின என வினவ, எனது வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார். என்றும் அன்புடயன் ஆனதால் உருகும் உள்ளத்தான் எனும் திருநாமம் கொண்டாரென்பது இத்தல வரலாறாக உள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget