மேலும் அறிய

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம்

தஞ்சாவூர்: பிரசித்தி பெற்ற தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரைப் பெருவிழாவை ஒட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது சாரங்கபாணி சுவாமி கோயில். இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழ நாட்டு பனிரெண்டாவது திருத்தலம் ஆகும். இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்‌கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு.


கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம்

இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 26ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா காணும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒன்பதாம் திருநாளான இன்று வியாழக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இவ்விழாவில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், கும்பகோணம் மேயர் க. சரவணன், துணை மேயர் சு.ப. தமிழழகன், அறநிலையத் துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், மாநகராட்சி ஆணையர் ஆர்.லெட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் இரவு தீர்த்தவாரி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை 81 கலச ஸ்தாபன திருமஞ்சனமும், இரவு சாரங்கபாணி சுவாமியுடன் சக்கரபாணி சுவாமி வீதியுலா, சனிக்கிழமை முதல் மே 12ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு பகுதிகளுக்கு எழுந்தருளல், 13ம் தேதி இரவு மணித்தட்டிகளால் அலங்கரிக்கப்பட்ட 3 புஷ்ப பல்லக்குகளில் சாரங்கபாணி, சக்கரபாணி, சக்கரவர்த்தி திருமகன் ஆகிய 3 சுவாமிகளின் வீதியுலா நடைபெறவுள்ளது.

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய தேராக கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயில் சித்திரைத் தேர் போற்றப்படுகிறது. இத்தேர் சாதாரண நிலையில் 350 டன் எடையுடையது. தேர் அலங்கார கட்டுமானத்துக்கு பின்பு 450 டன்களாக அதிகரிக்கிறது. ஆசன பீடம் வரை 28 அடி உயரமுள்ள இத்தேர் அலங்காரத்துக்கு பின்னர் 110 அடி உயரத்தை எட்டுகிறது. நான்கு குதிரைகள் உள்ளிட்ட வேலைப்பாடுகள் கொண்ட இத்தேரின் விட்டம் 28 அடி.

இத்தேரில் வியாழக்கிழமை அதிகாலை உபய நாச்சியார்களுடன் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து, தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதனிடையே, உச்சிபிள்ளையார் கோயில் அருகில் வந்த இத்தேர் உயர் மின் விளக்கு கோபுர கம்பத்தில் மோதியது. இதனால், உயர் மின் விளக்கு கோபுரம் சேதமடைந்ததால், தேரின் ஒரு புறத்தை தேரோட்டிகள் துண்டித்தனர்.

இதையடுத்து, உயர் மின் விளக்கு கோபுரத்தை, இயந்திரம் மூலம் இழுத்து அகற்றி பிடித்துக் கொண்ட பின்னர், அந்த இடத்திலிருந்து தேர் நகர்ந்தது. இதனால் சுமார் 1 மணிநேரம் தேரோட்டம் பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
Israel Atrocity: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
Embed widget