Ukraine Russia Conflict: அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் - ஜோ பிடன்
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர், உக்ரைன் மீதான உடனடியான படையெடுப்பை நோக்கி ரஷ்யா நகர்கிறது என்று எச்சரித்தார்.

அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த சாத்தியம் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடென் கூறியுள்ளார்.
ரஷ்யா- உக்ரைன் நாடகளுக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும், உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறல் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கணிக்கப்படுகிறது. அமெரிக்கா- ரஷ்யா என இருநாடுகளின் படைகளும் உக்ரைனுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பின் அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளதாகவும், மாஸ்கோ எல்லையில் இருந்து அதிகமான படைகளை பின்வாங்குவதாகக் கூறிய போதிலும் அடுத்த சில நாட்களில் தாக்குதல் சாத்தியமாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறினார்,
மேலும் மேற்கத்திய சார்பு அண்டை நாடு மீது ரஷ்ய படையெடுப்பு பற்றிய அச்சம் அதிகரித்து வருவதால், ஜனாதிபதி விளாடிமிர் புடினை அழைக்கும் திட்டம் தனக்கு இல்லை என்றும் கூறினார்.
#BREAKING Russia attack on Ukraine possible in 'next several days': Biden pic.twitter.com/PAETbt0sGc
— AFP News Agency (@AFP) February 17, 2022
இருப்பினும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கிரெம்ளின் கூறியுள்ளது. உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு எதுவும் இல்லை, கடந்த சில நாட்களாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றன. அது திட்டமிடப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு பொது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர், உக்ரைன் மீதான உடனடியான படையெடுப்பை நோக்கி ரஷ்யா நகர்கிறது என்று எச்சரித்தார்.
ரஷ்ய தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து மீண்டும் பதட்டங்கள் அதிகரித்த நிலையில், வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் மீதான கவுன்சில் கூட்டத்தில் இராஜதந்திரத்திற்கான எங்கள் தீவிர அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில் உரையாற்றுவார் என்று கூறினார்.
"சூழ்நிலையின் தீவிரத்தை தெரிவிப்பதே எங்கள் குறிக்கோள். ரஷ்யா உடனடியான படையெடுப்பை நோக்கி நகர்கிறது என்பதற்கான ஆதாரம் தரையில் உள்ளது. இது ஒரு முக்கியமான தருணம்" என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி- யுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

