மேலும் அறிய

கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடுவோம் - பாமக மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

’’பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து இரண்டு முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என புகார்’’

கடலூர் பெருநகராட்சி ஆக செயல்பட்டு வந்த இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் இயற்றப்பட்டு தமிழக அரசால் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே பாமக நகரம் சார்பில் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் கடலூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடுவோம் - பாமக மாவட்ட செயலாளர் எச்சரிக்கை
 
இதில் கடலூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாநகராட்சி ஆணையரை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது, கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருந்தாலும் கூட மக்களுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் மாநகராட்சி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை, கடலூர் மாநகராட்சி பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் 40 டன் குப்பைகளும் ஆங்காங்கே பெரும்பாலும் மக்கள் நடமாடும் பகுதிகளிலும் கடலூரின் முக்கிய ஆறுகலில் ஒன்றான தென்பெண்ணை ஆற்றங்கரையில் நகராட்சியாக செயல்பட்டு வந்த காலத்தில் இருந்து தற்பொழுது மாநகராட்சியாக கடலூர் தரம் உயர்த்தப்பட்டு இருந்தாலும் தொடர்ந்து மாநகராட்சி வாகனத்திலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
 

கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடுவோம் - பாமக மாவட்ட செயலாளர் எச்சரிக்கை
 
மேலும் மாநகரம் முழுவதும் இருக்கும் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து உள்ளன அதனை சீர் செய்வதற்கு இதுவரை மாநகராட்சி சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, குறிப்பாக மாநகர பகுதியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இதுவரை மக்களிடம் முழுமையாக போய் சேரவில்லை, மேலும் மாநகராட்சி சாலைகளில் பெரும்பாலான இடங்களில் விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன குறிப்பாக இதுவரை மாநகரத்தில் பன்றி கடித்து இரண்டு பேர் இறந்துள்ளனர் மேலும் நாய் கடித்து பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மாநகராட்சி பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து இரண்டு முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை, அதன் காரணமாகவே தற்பொழுது இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 
 

கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடுவோம் - பாமக மாவட்ட செயலாளர் எச்சரிக்கை
 
இதற்கு பின்னும் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநகராட்சி கட்டடத்தின் கதவுகளை பூட்டி மாநகராட்சிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தி, நிழல் மாநகராட்சியை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என பாமக சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget