மேலும் அறிய

வெகு விமரிசையாக நடந்த பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

விழுப்புரம் : வெகு விமரிசையாக நடைபெற்ற பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் அடுத்த பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நடந்தது. 3 ஆம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகளின் குலதெய்வமாக இந்த கோவில் விளங்குகிறது. விழா கடந்த 30ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 4 நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. 6ம் நாள் காப்பு கட்டுதலும், நேற்று முன்தினம் சுவாமிக்கு கண் திறப்பு விழா நடந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை 6: 00 மணிக்கு கூத்தாண்டவர் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பட்டுப்புடவை அணிந்தும், தலைநிறைய பூக்களை வைத்துக்கொண்டும், கைநிறைய வளையல்கள், காது, மூக்கு, கழுத்தில் நகைகளையும் அணிந்து தங்களை புதுமணப்பெண்கள் போல் அலங்கரித்துக்கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் திருநங்கைகள், கோயிலுக்குள் சென்று அரவாண் சாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்து அரவாணை தங்கள் கணவனாக பாவித்துக்கொண்டு கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர்.

அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்த திருநங்கைகள், கோவில் வளாகத்தில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி கூத்தாண்டவரை வழிபட்டதோடு ஆட்டம் ஆடி, பாட்டுப்பாடி கும்மியடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருநங்கைள் மட்டுமின்றி வேண்டுதலின் பேரில் ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் தாலி கட்டிக்கொண்டனர். தாலி கட்டிய பிறகு புதுமணப்பெண்கள் போல் காட்சியளித்த திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவில் அருகில் இரவு முழுவதும் விடிய, விடிய நடனமாடியும், கும்மியடித்தும் கூத்தாண்டவரை தனது கணவராக நினைத்து அவரின் அருமை, பெருமைகள் குறித்து ஆடிப்பாடி உற்சாகம் அடைந்தனர்.

விழாவின் 8 ஆவது நாள் நிகழ்ச்சியாக இன்று அதிகாலை கோவிலில் உள்ள அரவாண் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. தேர் அழிகளம் புறப்பட்டவுடன் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் மதியம் நத்தம் கிராம பந்தலுக்கு தேர் வந்தடைந்ததும் அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் உள்ள குங்கும பொட்டை அழித்து வெள்ளை சேலை அணிந்து விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுதுவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs PBKS LIVE Score: கடைசி ஓவரில் கலக்கிய ஹர்சல்; சதத்தை தவறவிட்ட விராட்; பஞ்சாப்புக்கு 242 ரன்கள் இலக்கு!
RCB vs PBKS LIVE Score: கடைசி ஓவரில் கலக்கிய ஹர்சல்; சதத்தை தவறவிட்ட விராட்; பஞ்சாப்புக்கு 242 ரன்கள் இலக்கு!
Vijayakanth Padma Bhushan: பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Sivakasi Blast: ”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Narayanan Thirupathy on Savukku : ”சவுக்கு தாக்கப்பட்டாரா? ஏத்துக்க முடியாது” நாராயணன் திருப்பதிsanjiv goenka angry on kl rahul : அன்று தோனி.. இன்று ராகுல்! திருந்தமாட்டீங்களா கோயங்கா!Karti Chidambaram slams modi : Thiruchendhur beach : திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்! ஆபத்தை உணராத பக்தர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs PBKS LIVE Score: கடைசி ஓவரில் கலக்கிய ஹர்சல்; சதத்தை தவறவிட்ட விராட்; பஞ்சாப்புக்கு 242 ரன்கள் இலக்கு!
RCB vs PBKS LIVE Score: கடைசி ஓவரில் கலக்கிய ஹர்சல்; சதத்தை தவறவிட்ட விராட்; பஞ்சாப்புக்கு 242 ரன்கள் இலக்கு!
Vijayakanth Padma Bhushan: பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Sivakasi Blast: ”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
TravelwithAbp : பரிசல் பயணத்துடன் இயற்கையை ரசிக்கவைக்கும் பரளிக்காடு சூழல் சுற்றுலா : எப்படி செல்வது?
TravelwithAbp : பரிசல் பயணத்துடன் இயற்கையை ரசிக்கவைக்கும் பரளிக்காடு சூழல் சுற்றுலா : எப்படி செல்வது?
Rahul Guarantee:
"ஆகஸ்ட் 15-க்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரம்பும்" : ராகுல் காந்தி அதிரடி..
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Embed widget