மேலும் அறிய

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை

கோபிநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக நல நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.

கடலூர் அருகே உள்ள தியாகவல்லியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் கோபிநாதன் (வயது 28), இவர் ஒரு ஓட்டல் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நெல்லிக்குப்பம் அருகே மேல்பாதியில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு கோவில் திருவிழாவிற்காக சென்று உள்ளார்.  அப்போது அங்கு வந்து இருந்த நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன், கோபிநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறி உள்ளது. இதை அடுத்து கடந்த 22.7.2020 அன்று கோபிநாதன், ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர், அந்த சிறுமியை தான் வேலை பார்த்து வந்த ஓட்டலுக்கு கடத்தி சென்று, அங்கு வைத்தும் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை
 
இது குறித்து சிறுமியின் பெற்றோர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கோபிநாதனை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவு அடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன் படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட கோபிநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக பாதுகாப்பு துறையின் சமூக நல நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.
 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை
 
மேலும் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பெண்கள் மீதும் சிறுமிகள் மீதும் தொடர்ந்து பாலியல் அத்து மீறல்கள் நடைபெற்று வருகின்றன, இந்த நிலையில் இது போன்ற தீர்ப்புகள் வரவேற்க தக்கதாக இருந்தாலும், மேலும் இது போன்று குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பட வேண்டும் எனவும் இனி இது போன்ற செயல்களில் ஈடுபட நினைப்போருக்கு இந்த மாதிரியான தீர்ப்புகள் தான் சிறந்த பாடமாக இருக்கும் எனவும் பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"சாத்தான் வேதம் ஒதுவது போல் இருக்கு" ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?  அப்செட்டில் துரைமுருகன்  சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு? அப்செட்டில் துரைமுருகன் சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayakumar vs EPS : ’’பழசை மறந்துட்டீங்களா EPS?'' Silent mode-ல் ஜெயக்குமார் வெளியான பகீர் பின்னணி
Udhayanidhi vs Kanimozhi : துணை பொதுச்செயலாளர் உதயநிதி !கனிமொழியை வைத்து ஸ்கெட்ச்ஸ்டாலின் MASTERMIND
கனிமொழிக்கு புதிய பதவி? அறிவாலயத்தில் தனி அலுவலகம்! ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்!
Union Minister Meena : மத்திய அமைச்சராகும் மீனா?வாக்கு கொடுத்த BIGSHOT திடீர் டெல்லி விசிட்
தவெகவினரை தாக்கிய திமுகவினர் உடனே CALL போட்ட விஜய்”எதுனாலும் நான் பாத்துக்குறேன்” DMK vs TVK Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சாத்தான் வேதம் ஒதுவது போல் இருக்கு" ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?  அப்செட்டில் துரைமுருகன்  சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு? அப்செட்டில் துரைமுருகன் சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
எங்களோடு War செய்யும் அளவுக்கு அதிமுக IT wing-க்கு தகுதியில்லை - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
எங்களோடு War செய்யும் அளவுக்கு அதிமுக IT wing-க்கு தகுதியில்லை - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
Coolie Song : ரஜினி , டி. ராஜேந்தர் , அனிருத் கலக்கும் சிகிட்டு பாடல் இதோ
Coolie Song : ரஜினி , டி. ராஜேந்தர் , அனிருத் கலக்கும் சிகிட்டு பாடல் இதோ
MR Vijayabhaskar : ’ EPS ஐ எதிர்த்து பேசினாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?’ கூட்டத்தில் நடந்தது என்ன..?
’ EPS ஐ எதிர்த்து பேசினாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?’ கூட்டத்தில் நடந்தது என்ன..?
Ramadoss Vs Anbumani: “என்னோட இருக்கறவங்களுக்குத் தான் தேர்தல்ல சீட்“ - ராமதாஸ் அதிரடி - அப்போ அன்புமணியோட கதி.?!
“என்னோட இருக்கறவங்களுக்குத் தான் தேர்தல்ல சீட்“ - ராமதாஸ் அதிரடி - அப்போ அன்புமணியோட கதி.?!
Embed widget