மேலும் அறிய

இன்னும் 6 மாதங்களில் பெட்ரோல் விலை 150 ரூபாயை தொடும் - நாராயணசாமி கணிப்பு

’’6 மாதங்களில் பெட்ரோல் 150 ரூபாய்க்கும், கேஸ் விலை 1250 ரூபாய்க்கும், டீசல் விலை 140 ரூபாய்க்கும் விற்பனையாகும் நிலை வரும்’’

ஆறு மாதங்களில் பெட்ரோல் விலை ரூ. 150ஐ தொடும் நிலையை மோடி உருவாக்குவார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடியுள்ளார். மேலும் புதுச்சேரி அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி  வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பதாவது:

பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். அதை போல் தற்போது நிலை உருவாகியுள்ளது. இன்னும் 6 மாதங்களில் பெட்ரோல் 150 ரூபாய்க்கும், கேஸ் விலை 1250 ரூபாய்க்கும், டீசல் விலை 140 ரூபாய்க்கும் விற்பனையாகும் நிலை வரும். மக்கள் மோடி அரசை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் 150 ரூபாயை தாண்டும் சூழலை மோடி உருவாக்குவார். பிரசார் பாரதி அமைப்பானது அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், வரலாற்றின் சாட்சியங்கள் என்ற ஆவணங்களை பெட்டகத்தில் வைத்துள்ளனர். அதை வெளியில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கிறார்கள். இது இமாலய தவறு.


இன்னும் 6 மாதங்களில் பெட்ரோல் விலை 150 ரூபாயை தொடும் - நாராயணசாமி கணிப்பு

சட்டப் பேரவை முடிந்து 2 மாதங்களாகியும் எக்கோப்புகளும் அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை. அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவில்லை. பாப்ஸ்கோ தீபாவளி பஜார் எந்தளவு சாத்தியம் என தெரியவில்லை. நிதியை கையில் வைத்திருந்து அறிவித்திருக்க வேண்டும். புதுச்சேரி அரசு ஸ்தம்பித்துள்ளது. நிதியில்லாததுடன் வருவாயை பெருக்கவில்லை. ஜிஎஸ்டி ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்து விடும். இழப்பீடு அதன் பிறகு கிடைக்காது. 1250 கோடி ரூபாய் வர வேண்டிய நிதி கிடைக்காமல் போவதால் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள் வந்துள்ளதால் திட்டங்களை நடைமுறைப் படுத்தப்படவில்லை என்ற கருத்து உண்மையில்லை. அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த தடை ஏதும் இல்லை. மக்களை மாநில அரசு ஏமாற்ற கூடாது. பஞ்சாலைகளை திறக்க ஆயத்த வேலையே நடக்கவில்லை. அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் முதல்வரால் எடுக்கப்படவில்லை. புதுச்சேரி அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. எந்த வேலையும் நடக்கவில்லை. தேர்தல் ஆணையருக்கு தேர்தல் நடத்திய அனுபவம் இல்லை. நீதிமன்ற தடை இருப்பதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை விலக்க வேண்டும். இதில், சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், தேர்தல் ஆணையரை சந்தித்துள்ளார். அதற்கு அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை என கூறி உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது குறிபிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget