மேலும் அறிய

அமைச்சர் பொன்முடி கடுமையான வார்த்தைகளால் திட்டினாரா..? - விழுப்புரத்தில் நடந்தது என்ன....?

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த  அமைச்சர் பொன்முடி சித்தலிங்கமடம் கிராமத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பாக வந்திருந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கொட்டும் மழையில் திமுக அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்டு கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  கிராம மக்களை ஆபாசமான வார்த்தைகளில் அமைச்சர் பொன்முடி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரித்து டி.எடப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க அமைச்சர் பொன்முடியின் உத்தரவின்பேரில் வருவாய் துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் தொகுதிக்குட்பட்ட இந்த சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரிப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்த போதிலும் அமைச்சர் பொன்முடியின் அழுத்தம் காரணமாக சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் பணிகளில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தலிங்கமடம் கிராமத்தில் இன்று நடைபெற இருந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கடையடைப்பு நடத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை கிராம மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட சித்தலிங்கமடம் கிராம மக்கள் மறுத்துவிட்ட நிலையில் இது குறித்து தகவலறிந்ததும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த  அமைச்சர் பொன்முடி சித்தலிங்கமடம் கிராமத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பாக வந்திருந்தார்.

அப்போது அமைச்சர் பொன்முடியை கொட்டும் மழையிலும் கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அப்போது சாமாதானம் செய்யும் முயற்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அமைச்சர் பொன்முடி சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் கிராம மக்கள் விடாப்பிடியாக அமைச்சரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் ஆத்திரமடைந்த அமைச்சர்  ஒரு கட்டத்தில் கிராம மக்களிடம் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி தீர்த்து தனது கோபத்தை வெளிப்படுத்தியாதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கிராம மக்களிடம் இருந்து அமைச்சர் பொன்முடியை போலீசார் பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பேருந்துகளில் ஓசி பயணம் செய்கிறீர்கள் என அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையானது. தனது தொகுதி மக்களிடமே அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக பொது வெளியில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி தனது அதிகார தோரணையை அமைச்சர் பொன்முடி வெளிப்படுத்தியுள்ளார் என  கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ’’அவர் கேட்டால் கொடுப்போம்’’ உதயநிதிக்கு PROMOTION போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதிபொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
Embed widget