மேலும் அறிய

“அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அங்கீகாரம்: மருத்துவ சீட்டில் 10% இட ஒதுக்கீடு” - அறிக்கை வெளியிட்ட ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடைபெறும் மருத்துவக் கல்விச் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான கோப்பு மத்திய உள்துறைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடைபெறும் மருத்துவக் கல்விச் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான கோப்பு மத்திய உள்துறைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

”புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடைபெறும் மருத்துவக் கல்விச் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ஒரு சில ஊடகங்களில் சிலரால் புரிதலற்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியின் போது மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கருத்து முன்வைக்கப்பட்டபோது அப்போது இருந்த துணைநிலை ஆளுநர் அதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில் கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அன்றைய சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அந்த வரைவிற்கு சில் காரணங்களால் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆனால், இந்த ஆண்டு சென்டாக் மருத்துவக் கல்வி மாணவர்ச் சேர்க்கை தொடர்பான கோப்பு துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கு வந்தபோது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான கருத்தை மாண்புமிகு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் முன்வைத்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் துணைநிலை ஆளுநரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டு வரும் சூழ்நிலையில் 10 % இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கோப்பு உடனடியாக புதுச்சேரி அமைச்சரவையின் தீர்மானத்தோடு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்கனவே, வேறு சில காரணங்களுக்காக இடஒதுக்கீடு தொடர்பான கோப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்காமல் இருந்த நிலையில், தற்போதைய கோப்பும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியம் எற்பட்டது. அதன்படி கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு சிலர் கூறுவதுபோல நிர்வாக ரீதியாக இந்த நிலையில் மத்திய அரசுக்கு அனுப்பாமல் மாநில அளவில் முடிவெடுப்பது சாத்தியமில்லை.

மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்ட நாள் முதல் துணைநிலை ஆளுநர் அலுவலகம், தலைமைச் செயலர், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் அதற்கான ஒப்புதல் பெறுவதற்கான பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். துணைநிலை ஆளுநரும் தனிப்பட்ட முறையில் அதில் அக்கறை கொண்டு ஒப்புதல் விரைவில் கிடைப்பதற்காக உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார்.

இத்தகைய முயற்சியின் காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்விச் சேர்க்கையில் 10 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு குறித்த காலத்திற்குள் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று உள்ளார்த்தமான அக்கறையோடு செயல்பட்டு வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்”

என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget