மேலும் அறிய

கடலூர்: கள்ளக்காதலனை வைத்து கணவனை கொன்று நாடகமாடிய மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தினேஷ் பாபுவும், கல்பனாவும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்ததால் சாதி பிரச்னையால் திருமணம் செய்ய முடியாமல், கல்பனாவின் தோழி வித்யாவை தினேஷ்பாபு திருமணம் செய்துள்ளார்.

கடலூரில் கள்ளக்காதலனை வைத்து கணவனை கொன்று நாடகமாடிய மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி முதன்மை மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சீனுவாசன். மருந்து விற்பனை பிரதிநிதி மேலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி பண்ருட்டியை சேர்ந்த கல்பனா. 2013 ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி, திருவதிகை, ராசாப்பாளையம் அருகே மர்ம நபர்களால் சீனுவாசன் கொலை செய்யப்பட்டார். அப்போது பண்ருட்டி போலீசார், கல்பனாவிடம் விசாரணை செய்ததில், காரில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல், சீனுவாசனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தனது நகைகளை பறித்துச் சென்றதாக கூறினார்.
 
சந்தேகமடைந்த போலீசார், அவரது மொபைல் போன் அழைப்புகளை வைத்து விசாரணை செய்ததில், கள்ளக்காதல் விவகாரத்தில், கல்பனா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவர் சீனுவாசனை கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் இந்த வழக்கில் தினேஷ் பாபுவும், கல்பனாவும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்ததால் சாதி பிரச்னையால் திருமணம் செய்ய முடியாமல், கல்பனாவின் தோழி வித்யாவை தினேஷ்பாபு திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள், கல்பனாவுக்கும் சீனுவாசனுக்கும் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் கல்பனா, தினேஷ்பாபுவுடனான பழக்கத்தை தொடர்ந்தார். சீனுவாசன் வெளியூர் செல்லும் நேரங்களில், கல்பனா, தினேஷ்பாபுவை சென்னைக்கு வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளார்.

கடலூர்: கள்ளக்காதலனை வைத்து கணவனை கொன்று நாடகமாடிய மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
 
இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கல்பனா மற்றும் தினேஷ்பாபு, சீனுவாசனை கொலை செய்ய திட்டமிட்டனர். மே 31 ம் தேதி திருமண நாளையொட்டி கடலூரில் வெள்ளிக்கடற்கரை சென்று, திரைப்படம் பார்த்துவிட்டு, பண்ருட்டிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டதும், தினேஷ்பாபு மற்றும் அவரது நண்பர் முரளி இருவரும், திருவதிகை.ராசாப்பாளையம் அருகே சீனுவாசனை வழி மறித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இவ்வழக்கில் பின்னர் விசாரணையில் கல்பனா கணவரை கொல்ல திட்டம் தீட்டி நாடகமாடியது தெரிவந்தது. வழிப்பறி கொள்ளையில் நடந்த கொலை பிரிவில் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை, திட்டமிட்டு கொலை செய்தல், தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கல்பனா (26) தினேஷ்பாபு (27) முரளி (27) ஆகியோரை கைது செய்தனர்.
 
 இவ்வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த நிலையில் விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜவகர் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றவாளிகள் கல்பனா மற்றும் தினேஷ்பாபு ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கல்பனாவிற்கு 4000 ரூபாயும் தினேஷ் பாபுவிற்கு 3 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை அடுத்து கல்பனா வேலூரிலும், தினேஷ்பாபு கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget