மேலும் அறிய

என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் தொடரும் போராட்டம் - கைதான பாமகவினர்

என்எல்சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் விவகாரம் - பாமக சார்பில் நேற்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்... மறியலில் ஈடுபட முயன்ற 250க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது.

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி நெய்வேலி புவனகிரி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள 37 க்கும் மேற்பட்ட கிராமங்களில் என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த முறை நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை வாய்ப்பு, வழங்கப்படாத நிலையில் இனி என்.எல்.சி-க்கு நிலம் தர மாட்டோம் என விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.
 
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த 2006 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டது. இந்த பணியின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மக்களை பணி நடைபெறும் இடத்திற்கு வரவிடாமல் காவல்துறையினர் அக்கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.
 
இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் என்எல்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் காவல்துறையை ஏவி அடக்கு முறையை கையாண்டு நிலங்களை சமன் செய்யும் பணியில் ஈடுபடுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் தொடரும் போராட்டம் - கைதான பாமகவினர்

இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடைபெறும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் வழக்கம் போல் கடைகள் மற்றும் பேருந்துகள் இயங்கும் என்றும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
முழு அடைப்பு என்பதால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் பாதுகாப்போடு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி நெய்வேலி மற்றும் புவனகிரி ஆகிய பகுதிகளில் 80 சதவீதம் கடைகள் மூடப்பட்டு உள்ளன. மாவட்டத்தின் பிற பகுதிகளில் 50% கடைகள் மூடப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படவில்லை எனினும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
 
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் என் எல் சி நிறுவனமும் தமிழக அரசும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டங்களை நடத்த அந்தந்த பகுதிகளில் திரண்டனர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபடும் முயன்ற பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் ஏற்கனவே 55 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் பண்ருட்டி குறிஞ்சிப்பாடி என மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட முயன்ற 250க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆரோவில் குடியிருப்பாளர்கள் சந்திப்பு : ரூ.300 கோடி நிதி ஆதரவுடன் புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!
ஆரோவில் குடியிருப்பாளர்கள் சந்திப்பு : ரூ.300 கோடி நிதி ஆதரவுடன் புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!
Puducherry Power Cut: புதுச்சேரியில் இன்று மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
Puducherry Power Cut: புதுச்சேரியில் இன்று மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
Population census : புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் துவக்கம் - கேட்கப்படும் 33 கேள்விகள்..!
Population census : புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் துவக்கம் - கேட்கப்படும் 33 கேள்விகள்..!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Embed widget