மேலும் அறிய

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை தூக்கி வீசி போராட்டம் - அகதிகளாக அறிவிக்க கோரிக்கை

மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி எங்களுக்கு உரிய முறையில் பட்டா வழங்க வேண்டும் , இல்லையெனில் சொந்த நாட்டிலேயே தாங்கள் அகதிகளாக அறிவித்து விடுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது, இதேபோல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டமும் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. 

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை தூக்கி வீசி போராட்டம் - அகதிகளாக அறிவிக்க கோரிக்கை
 
மேலும் தங்கள் குறைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து இருக்கும் புகார் மனு பெட்டியில் போடுமாறு அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது கடந்த சில வாரங்களாக புகார் பேட்டியல் மனு அளித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடலூர் மாவட்டம் கோட்டகம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தங்கள் கிராமத்தினை திடீரென்று நீர் நிலை ஆக்கிரமிப்பு என கூறி உடனடியாக வெளியேற சொல்வதாக கூறுவதாக மனு அளிக்க வந்தனர்.
 

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை தூக்கி வீசி போராட்டம் - அகதிகளாக அறிவிக்க கோரிக்கை
 
அப்பொழுது சில குறைந்த அளவு மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என காவல்துறை சார்பில் தெரிவித்த போதும் தங்களுக்கு நியாயம் வேண்டும் என கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், பின்னர் திடீரென தங்களை அகதிகளாக அறிவிக்க கோரி தாங்கள் வைத்து இருந்த ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர், போராட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறும் பொழுது,  கடலூர் மாவட்டம் கோட்டகம் ஊராட்சியில் உள்ள ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை. மேலும் இந்த ஏரியின் ஒதுக்கு புறமாக சுமார் 70 ஆண்டுகளாக வீடுகள் கட்டி 27 குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.
 

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை தூக்கி வீசி போராட்டம் - அகதிகளாக அறிவிக்க கோரிக்கை
 
இந்த நிலையில் ஏரிக்கு அருகில் உள்ள கிராமத்திற்கும் எந்த வித பாதிப்பும் இல்லாத காரணத்தாலும், அரசு கட்டிடங்கள், கிராம சாலைகள், தேசிய ஊரக நெடுஞ்சாலை அந்த வழியாக செல்வதாலும் சம்பந்தப்பட்ட, பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் எந்த வித கருத்து கேட்காமலும், ஊராட்சிமன்ற நிர்வாகத்தின் கருத்துகளை கேட்கமாலும் ஒரு தனிநபர் கொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்காமல், மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி எங்களுக்கு உரிய முறையில் பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் சொந்த நாட்டிலேயே தாங்கள் அகதிகளாக அறிவித்து விடுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

தலைப்பு செய்திகள்

பகிரங்க மன்னிப்பு கேட்ட பொன்முடி...! இனி அப்படி பேச வாய்ப்பில்லை - நீதிமன்ற வழக்கு ஒத்திவைப்பு குறித்து பொன்முடி உருக்கம்
பகிரங்க மன்னிப்பு கேட்ட பொன்முடி...! இனி அப்படி பேச வாய்ப்பில்லை - நீதிமன்ற வழக்கு ஒத்திவைப்பு குறித்து பொன்முடி உருக்கம்
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget