மேலும் அறிய

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை தூக்கி வீசி போராட்டம் - அகதிகளாக அறிவிக்க கோரிக்கை

மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி எங்களுக்கு உரிய முறையில் பட்டா வழங்க வேண்டும் , இல்லையெனில் சொந்த நாட்டிலேயே தாங்கள் அகதிகளாக அறிவித்து விடுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது, இதேபோல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டமும் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. 

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை தூக்கி வீசி போராட்டம் - அகதிகளாக அறிவிக்க கோரிக்கை
 
மேலும் தங்கள் குறைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து இருக்கும் புகார் மனு பெட்டியில் போடுமாறு அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது கடந்த சில வாரங்களாக புகார் பேட்டியல் மனு அளித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடலூர் மாவட்டம் கோட்டகம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தங்கள் கிராமத்தினை திடீரென்று நீர் நிலை ஆக்கிரமிப்பு என கூறி உடனடியாக வெளியேற சொல்வதாக கூறுவதாக மனு அளிக்க வந்தனர்.
 

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை தூக்கி வீசி போராட்டம் - அகதிகளாக அறிவிக்க கோரிக்கை
 
அப்பொழுது சில குறைந்த அளவு மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என காவல்துறை சார்பில் தெரிவித்த போதும் தங்களுக்கு நியாயம் வேண்டும் என கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், பின்னர் திடீரென தங்களை அகதிகளாக அறிவிக்க கோரி தாங்கள் வைத்து இருந்த ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர், போராட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறும் பொழுது,  கடலூர் மாவட்டம் கோட்டகம் ஊராட்சியில் உள்ள ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை. மேலும் இந்த ஏரியின் ஒதுக்கு புறமாக சுமார் 70 ஆண்டுகளாக வீடுகள் கட்டி 27 குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.
 

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை தூக்கி வீசி போராட்டம் - அகதிகளாக அறிவிக்க கோரிக்கை
 
இந்த நிலையில் ஏரிக்கு அருகில் உள்ள கிராமத்திற்கும் எந்த வித பாதிப்பும் இல்லாத காரணத்தாலும், அரசு கட்டிடங்கள், கிராம சாலைகள், தேசிய ஊரக நெடுஞ்சாலை அந்த வழியாக செல்வதாலும் சம்பந்தப்பட்ட, பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் எந்த வித கருத்து கேட்காமலும், ஊராட்சிமன்ற நிர்வாகத்தின் கருத்துகளை கேட்கமாலும் ஒரு தனிநபர் கொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்காமல், மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி எங்களுக்கு உரிய முறையில் பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் சொந்த நாட்டிலேயே தாங்கள் அகதிகளாக அறிவித்து விடுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget