மேலும் அறிய

கடலூரில் ATM இயந்திரத்தில் இருந்து 7.5 லட்சம் கொள்ளை - பணம் நிரப்பிய ஊழியரே அபேஸ் செய்தது அம்பலம்

ரகசிய எண்ணை பயன்படுத்தி எந்திரத்தில் இருந்து 7 லட்சத்தை கொள்ளையடித்ததும், அப்போது அவசர கதியில் சாவியை மறந்து எந்திரத்திலேயே வைத்து விட்டு சென்றதும் தெரியவந்தது

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கிருஷ்ணகுமார் (26). இவர் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பணம் பெற்று, அதனை அந்த அந்த வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் ஏ.டி.எம். எந்திர பொறுப்பாளராக இருந்து வருகிறார். 

கடலூரில் ATM இயந்திரத்தில் இருந்து 7.5 லட்சம் கொள்ளை - பணம் நிரப்பிய ஊழியரே அபேஸ் செய்தது அம்பலம்
 
இந்த நிலையில் நேற்று அவர் தன்னுடன் பணிபுரியும் 3 பேருடன், கடலூர் கே.என்.பேட்டையில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக 9 லட்சத்தை அந்த வங்கியில் பெற்று கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பி விட்டு புறப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை ஏ.டி.எம். எந்திர பராமரிப்பு மற்றும் தணிக்கை அதிகாரி சுந்தரராஜன் (35) இந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்த போது, அந்த எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக திறக்கக்கூடிய இடத்தில் சாவி ஒன்று தொங்கி கொண்டிருந்தது. மேலும் ஏ.டி.எம். மையத்தில் ஆங்காங்கே பணம் சிதறி கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
 

கடலூரில் ATM இயந்திரத்தில் இருந்து 7.5 லட்சம் கொள்ளை - பணம் நிரப்பிய ஊழியரே அபேஸ் செய்தது அம்பலம்
 
அதன் பேரில் ஆய்வாளர் கவிதா மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின்னர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் எந்திரத்தை திறக்க பயன்படுத்தப்படும் சாவி அங்கேயே இருந்ததால், காவல் துறையினருக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் 4 பேரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிருஷ்ணகுமார் தான் ஏ.டி.எம்.
 

கடலூரில் ATM இயந்திரத்தில் இருந்து 7.5 லட்சம் கொள்ளை - பணம் நிரப்பிய ஊழியரே அபேஸ் செய்தது அம்பலம்
 
எந்திரத்தில் பணம் நிரப்பிய பிறகு, நள்ளிரவில் அவர் மட்டும் தனியாக வந்து ரகசிய எண்ணை பயன்படுத்தி எந்திரத்தில் இருந்து ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்ததும், அப்போது அவசர கதியில் சாவியை மறந்து எந்திரத்திலேயே வைத்து விட்டு சென்றதும் தெரியவந்தது.இதை அடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை வைத்த நபரே அதனை கொள்ளையடித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Embed widget