மேலும் அறிய

மதம் மறுப்பு திருமணம் செய்ததால் கொலை மிரட்டல் - மாலையும் கழுத்துமாக காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

’’தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்பதால் தங்களை பெற்றோர்கள் ஏற்க மறுத்து வந்தனர். ஆதலால் கோயிலுக்கு சென்று திருமணம் செய்துகொண்டோம்’’

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று திடீரென திருமணம் முடிந்த கையுடன் ரஞ்சித் குமார், எதித் எனும் தம்பதியினர் தங்களது குடும்பத்தாரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மணப்பெண் சார்பில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது. தான் பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள நெல்லித்தோப்பு என்னும் பகுதியை சேர்ந்தவர், தானும் கடலூர் ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக காதலித்து வந்தோம், இது குறித்து இரு வீட்டாரின் பெற்றோர்களும் தங்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்து இருந்தனர். ஆனால் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் பெற்றோர் தனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து உள்ளனர், பின்னர் இது குறித்து கேட்டதற்கு தாங்கள் சொல்வதை மட்டும் கேட்டு நடக்க வேண்டும் என தன்னை தொடர்ந்து மிரட்டி வந்தனர்.


மதம் மறுப்பு திருமணம் செய்ததால் கொலை மிரட்டல் - மாலையும் கழுத்துமாக காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

பின்னர் இதனை காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு தன் காதலர் ரஞ்சித்குமார் உடன் வீட்டைவிட்டு வெளியேறினேன் பின்னர் இன்று காலை இருவருக்கும் வரக்கால்பட்டு வில்லு கட்டி அய்யனார் கோவில் திருமணம் நடந்து முடிந்தது. இதனை அறிந்த இருவரின் பெற்றோர் தங்களை இழிவாக பேசியும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் ஆதலால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணமகன் ரஞ்சித் கூறுகையில், தாங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்தோம் பின்னர் ஒரு கட்டத்தில் பெற்றோரிடம் இது குறித்து கூறினோம் ஆனால், தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்பதால் தங்களை பெற்றோர்கள் ஏற்க மறுத்து வந்தனர். ஆதலால் கோயிலுக்கு சென்று திருமணம் செய்துகொண்டோம். பின்னர் இன்று காலை திருமணம் முடிந்தது முதல் பெற்றோர் தொடர்ந்து தங்களை அச்சுறுத்தி வருகின்றனர். மேலும் தங்களை கொலை செய்துவிடுவோம் என கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஆதலால் காவல்துறை தங்களுக்கு பாதுகாப்பு அளித்து பெற்றோரிடம் பேசி சேர்த்து வைக்க வேண்டும் என கூறினார்.


மதம் மறுப்பு திருமணம் செய்ததால் கொலை மிரட்டல் - மாலையும் கழுத்துமாக காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

மேலும் காவல் துறையினர் தங்களின் பெற்றோர்களிடம் இது குறித்து பேசுவதாக நம்பிக்கை தெரிவித்து உள்ளனர் என கூறினர்.  திடீரென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திடீரென மாலையும் கழுத்தும் ஆக மணமக்கள் வந்ததால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget