மேலும் அறிய

திருவண்ணமலையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழப்பு - அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்

தானிப்பாடி மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மட்டுமே இருந்ததால் கவனக்குறைவு காரணமாக நோயாளிகளை முறையாக கவனிப்பதில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த உள்ள தே.ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி விக்னேஷுக்கும் (25), தானிப்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியை சார்ந்த சென்னம்மாளுக்கும் (23) கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருவுற்ற சென்னமாள் தானிப்பாடியில் உள்ள தனது தாய் வீட்டில் பிரசவத்திற்காக காத்திருந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி சென்னமாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சென்னமாளை தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அவருக்கு அன்று மாலை ஆண் குழந்தை பிறந்தது. தொடந்து சென்னமாள் சுயநினைவின்றி  இருந்து வந்த நிலையில்  ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.

திருவண்ணமலையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழப்பு - அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்

அதனை தொடர்ந்து மருத்துவமனையில் சுயநினைவு இழந்து சிகிச்சை பெற்று வந்த சென்னம்மாளுக்கும் உடல்நலம் திடீரென பாதிப்பு அதிகரித்த நிலையில், நேற்று இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். ஆனால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சென்னமாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த சென்னம்மாளின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் அனைவரும் தானிப்பாடி அரசு மருத்துவமனை முன்பு இன்று காலை 11 மணியளவில் முற்றுகையிட்டு உள்ளனர். பின்னர் அப்பகுதியில் அரூர்- திருவண்ணாமலை செல்லக்குடிய நெடுஞ்சாலையை மறித்து செல்லமாளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணமலையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழப்பு - அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்

இச்சம்பவம் குறித்து உறவினர்கள் கூறுகையில், தானிப்பாடி அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மட்டுமே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக்கூடியவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவர்கள் இல்லாததாலும், மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவுமே தாயும் சேயும் உயிரிழந்துள்ளனர். தானிப்பாடி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பணியில் உள்ள மருத்துவரை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும்.  உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தானிபாடி காவல் நிலைய  ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

திருவண்ணமலையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழப்பு - அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்

தாயும் சேயும் மரணம் அடைந்தது தொடர்பாக  முதன்மை மருத்துவர் முப்பினிடம் பேசுகையில், எங்களுடைய மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமத்திக்கப்பட்ட சென்னமாளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளித்தோம். ஆனாலும் குழந்தை பிறந்த சிலமணி நேரங்களில் இறந்துவிட்டது. மேலும் தாயை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நாங்களே 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னமாளை திருவண்ணாமலை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பினோம் அப்போது மருத்துவமனையில் இருந்து செவிலியர்கள் இரண்டு நபர்களையும் அவர்களுடன் அனுப்பினோம் தாயை காப்பற வேண்டும் என்ற குறிக்கோள் தான் எங்களுடைய மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.  அப்போது சென்னமாளின் உறவினர்களும் இருந்தார்கள் நாங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுத்தோம் என்று அவர்களும் பார்த்தார்கள் என்றும் தானிப்பாடி மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் உள்ளனர் என்றும்  தெரிவித்தார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget