மேலும் அறிய

Crime: அம்மணி அம்மன் மடம் விவகாரம்: அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த 3 பேர் கைது

திருவண்ணாமலை அம்மணி அம்மன் மடம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுப்பட்ட அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடத்த 3 பேரை போலீசார் கைது செய்து 3 பேருக்கு வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அம்மனி அம்மன் கோபுரம் எதிரே அம்மனி அம்மன் மடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.  அதன் அடிப்படையில் நேற்று காலை காவல்துறையினர், வருவாய்த் துறையினர், கோவில் ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் முன்னிலையில் 23 ஆயிரத்து 800 சதுர அடி நிலப்பரப்பு ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து மீட்கப்பட்டது. மேலும் அம்மனி அம்மன் கோபுரம் எதிரே சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று சிறப்புமிக்க அம்மனி அம்மன் மடம் இருந்து வந்தது.

 


Crime: அம்மணி அம்மன் மடம் விவகாரம்: அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த 3 பேர் கைது

இந்த மடத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்கி உணவு உட்கொண்டு நீராடி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செய்து வந்தனர்.  இந்த அம்மனி அம்மன் மடத்தையும் அறநிலைத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து வந்தனர். அப்போது அங்கு இந்து மக்கள் கட்சியினர் திடிரென அங்கு வந்து அம்மனின் மடத்தை இடிக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அங்கு இருந்து ஜேசிபி இயந்தரத்தை எடுத்து சென்றனர். அதன் பிறகு இந்து முன்னணி கட்சியினர் கலைந்து சென்றனர்.   அதனைத்தொடர்ந்து (19.03.2022) அன்று காலையில் மீண்டும் அறநிலையத்துறை அதிகாரிகள் அம்மணி அம்மன் மடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க வந்தனர். அப்போது அகற்றப்பட்டு இருக்கும் நேரத்தில்


Crime: அம்மணி அம்மன் மடம் விவகாரம்: அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த 3 பேர் கைது

இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த பாஜக நிர்வாகி சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகளான செங்கத்தைச் சேர்ந்த அஜித்குமார், கீழ்நாத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், தேனிமலை பகுதியைச் சேர்ந்த காளியப்பன், ஏழுமலை, கார்த்தி ஆகியோர் அம்மணி அம்மான் மடத்தின் மீது ஏற்றிக் கொண்டு பணிகளை செய்யவந்த அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் விமர்சித்தும், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாம் தடுத்ததாக கூறப்படுகிறது.  

இதுகுறித்து அண்ணாமலையார் திருக்கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரேசன் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நகர காவல் துறையினர்  வழக்கு பதியப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் தேனிமலையைச் சேர்ந்த காளியப்பன் ஏழுமலை கார்த்தி ஆகிய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  தப்பித்து சென்ற பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
Baba Vanga Predictions 2026: “ஏஐ, இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும்“; 2026-ல் ஆபத்து; பாபா வங்கா கணித்தது என்ன.?
“ஏஐ, இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும்“; 2026-ல் ஆபத்து; பாபா வங்கா கணித்தது என்ன.?
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
Baba Vanga Predictions 2026: “ஏஐ, இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும்“; 2026-ல் ஆபத்து; பாபா வங்கா கணித்தது என்ன.?
“ஏஐ, இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும்“; 2026-ல் ஆபத்து; பாபா வங்கா கணித்தது என்ன.?
Tamilan : ‘அடக்குனா அடங்குற ஆளா நீ’ யாரு டா அடிமை? – லண்டனில் போராடி வென்ற தமிழர்..!
‘அடக்குனா அடங்குற ஆளா நீ’ யாரு டா அடிமை? – லண்டனில் போராடி வென்ற தமிழர்..!
Old pension scheme : மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.? புத்தாண்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருமா குஷியான அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.? புத்தாண்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருமா குஷியான அறிவிப்பு
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
Embed widget