மேலும் அறிய

Crime: தலைக்கேறிய ஒயிட்னர் போதை.. 5 வயது சிறுமிக்கு வன்கொடுமை கொடூரம்... மரணத்தண்டனை விதித்த நீதிமன்றம்..

காஜியாபாத் அருகே கடந்த டிசம்பர் மாதம் நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 

காஜியாபாத் அருகே கடந்த டிசம்பர் மாதம் நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 

 20 வயதான சோனு குப்தா மீது காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டு 45 நாட்களில் அந்த நபர்தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது காஜியாபாத்தில் நடந்த மிக விரைவான விசாரணைகளில் ஒன்றாகும். 

நடந்தது என்ன..? 

கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ஒயிட்னரை சுவாசித்து போதையில் இருந்த சோனு குப்தா, அருகிலிருந்த சிட்டி ஃபாரஸ்ட் பூங்காவில் இருந்த 5 வயது சிறுமியை வழிமறித்துள்ளார். இதனால், பயந்துபோன தன் வீட்டிற்கு ஓடியுள்ளார். ஆனால், விடாத சோனு, அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இந்தநிலையில், அந்த சிறுமி அவர்கள் வீட்டுக்கு அருகிலிருந்த சாலையில் பூக்களை தனியாக பறித்துக்கொண்டிருந்தபோது, சோனு யாரும் பார்க்காத நேரத்தில் அச்சிறுமியை கடத்தி சென்றுள்ளார். 

அருகிலுள்ள வனப்பகுதிக்கு தூக்கிச்சென்று டயப்பரால் கட்டி, சுயநினைவற்ற நிலையில் இருந்த அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்தார். 

பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள நந்த்கிராமில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி சென்று படுத்து கொண்டார். மைனர் சிறுமியின் உடல் மறுநாள் சாஹிபாபாத் நகரின் காட்டுப் பகுதிக்கு அருகில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

இதையடுத்து, இந்த வழக்கை விரைவில் றியடிக்க ஆறு போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. விசாரணையின் போது சுமார் 150 சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், 20 வயதான சோனு குப்தாவை அவரது வீட்டில் ஆறு நாட்களுக்கு பிறகு கைது செய்தனர். போலீசார் அவரது வீட்டின் கதவை துப்பாக்கியுடன் தட்டியபோது, என்னை சுட வேண்டாம் என்று சரண் அடைந்துள்ளார். 

சிறுமியின் பிரேதப் பரிசோதனையில் வெளியான அறிக்கையில், 5 வயது சிறுமியின் அந்தரங்க உறுப்பில் 5x2 செமீ காயம் இருந்தது. அந்த சிறுமியின் கழுத்து இறுக்கப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து டிசிபி டிரான்ஸ் ஹிண்டன் தீக்ஷா ஷர்மா கூறுகையில், "சம்பவம் நடந்த 15 நாட்களுக்குள் போலீசார் சோனு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் 16 சாட்சிகளைக் கேட்டபின் சோனு மீது (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) நீதிபதி மரண தண்டனை விதித்தார்." என்று கூறினார். 

போக்சோ சட்டம் : 

கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 

  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
  • Sexual Assault - பாலியல் தொல்லை
  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு
  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்

இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை 
இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Embed widget