மேலும் அறிய

திருச்சி ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்களால் திருச்சி ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதேபோல வெளியூர்களில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் தமிழகத்தின் மையப் பகுதியாக இருக்கக்கூடிய திருச்சியிலிருந்து சென்னை, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை 350 சிறப்பு பஸ்களும், நேற்று முன்தினம் 400 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கும், மன்னார்புரம் ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை மற்றும் மதுரை வழித்தடத்திலும், வில்லியம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து தஞ்சை வழித்தடத்தில் திருவாரூர், நாகை, பட்டுக்கோட்டை, காரைக்கால், குடந்தை உள்ளிட்ட ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


திருச்சி ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என்று 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால்  பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினர். இதனால் விடிய, விடிய பஸ்நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களில் புறப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் திருச்சிக்கு வந்து குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தஞ்சை மற்றும் அதன் வழித்தடத்தில் உள்ள ஊர்களுக்கு செல்லவேண்டியவர்கள் ஆவார்கள். மேலும் அந்த நேரத்தில், திருச்சியில் இருந்து தஞ்சை வழித்தடத்தில் பஸ்கள் இல்லை. அதனால் அவர்கள் தஞ்சை பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் பஸ்கள் இயக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அந்த பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ட்டது. இதுபற்றி அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் பயணிகளை சமரசம் செய்தனர். பின்னர் 5 மணி அளவில் அவர்களுக்கு பஸ்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் பஸ்களில் சொந்தஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே சென்னையில் இருந்து வந்த சிறப்பு பஸ்கள் பயணிகள் இன்றி காலியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


திருச்சி ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

இந்நிலையில் நேற்று முன்தினம் பஸ்நிலையங்களில் கூட்டம் கொஞ்சம் குறைவாக காணப்பட்டது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இதேபோல திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, அந்தியோதயா, குருவாயூர் உள்ளிட்ட ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது. அதுபோல் சென்னை, தஞ்சை மார்க்கமாக சென்ற ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் நிற்க கூட இடமில்லாமல் பயணித்தனர். மத்திய மற்றும் சத்திரம் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததையொட்டி போலீசார் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை: விபத்துகளைத் தடுக்க அதிரடி நடவடிக்கை!
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை: விபத்துகளைத் தடுக்க அதிரடி நடவடிக்கை!
Trichy power cut: திருச்சியில் நாளை பவர் கட்! - லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு உடனே செக் பண்ணுங்க
திருச்சியில் நாளை பவர் கட்! - லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு உடனே செக் பண்ணுங்க
மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பாய்ந்த ரயில்… தெற்கு ரயில்வே சாதனை!: மகிழ்ச்சியான விஷயம் தெரியுமா!
மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பாய்ந்த ரயில்… தெற்கு ரயில்வே சாதனை!: மகிழ்ச்சியான விஷயம் தெரியுமா!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget