மேலும் அறிய

முதல் பயணம்.. பாகிஸ்தான் பிரச்னை.. போராட்ட புத்தகம்.. பிரதமர் மோடியின் பங்களாதேஷ் ட்ரிப் ஹைலைட்ஸ்..

“பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் நான் பங்கேற்றது எனது முதல் போராட்டங்களில் ஒன்று. அந்தச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட நானும் சில தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்"

கொரோனாவுக்குப் பிறகான பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதாலேயே அவரது நேற்றைய பங்களாதேஷ் பயணம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. உலகிலேயே அதிக நாடுகள் பயணம் செய்த பிரதமர் என்கிற பெருமை வேறு அவருக்கு இருப்பதால், ”இந்த லாக்டவுன் காலத்தில் அவர் எப்படிதான் முடங்கி இருந்தார்?” என அவரது விமானப்பயணத்தைக் குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் பறந்தன. பங்களாதேஷ் சுதந்திரப்போரின் ஐம்பதாவது ஆண்டு அனுசரிப்பு விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தார் அவர்.


முதல் பயணம்.. பாகிஸ்தான் பிரச்னை.. போராட்ட புத்தகம்.. பிரதமர் மோடியின் பங்களாதேஷ் ட்ரிப் ஹைலைட்ஸ்..அவரது மற்ற எந்த வெளிநாட்டுப் பயணங்களைப் போலதான் இதுவும் இருக்கும் என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு விழாவில் அவர் பேசியவை ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அமைந்தன. பாகிஸ்தானைக் குறித்த அவரது கருத்துகள் அதிர்ச்சி ரகம் என்றால், பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார் எனக் குறிப்பிட்டது, ஒட்டுமொத்த பங்களாதேஷ் மற்றும் இந்திய மக்களுக்கும் ஆச்சரியமூட்டும் தகவலாக இருந்தது.

" ”தன் நாட்டு மக்களையே பாகிஸ்தான் இனப்படுகொலை செய்தது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. அந்த மனிதநேயமற்றவர்கள் இன்றும் எஞ்சியிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நாம் எச்சரிக்கையுடன் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம்” "
-நரேந்திர மோடி

அவர் பேசியவற்றிலிருந்து சில முக்கியப் பகுதிகள், “பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் நான் பங்கேற்றது எனது முதல் போராட்டங்களில் ஒன்று. அந்தச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட நானும் சில தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பங்கு பொதுமக்கள் அனைவரும் அறிந்ததே. இரு நாடுகளும் இணைந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டியது தென்கிழக்கு ஆசியாவின் இன்றியமையாத தேவை” எனக் குறிப்பிட்டார்.

தனது பேச்சில் ஒட்டுமொத்தமாகப் பாகிஸ்தானைச் சாடிய மோடி ”தன் நாட்டு மக்களையே பாகிஸ்தான் இனப்படுகொலை செய்தது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. அந்த மனிதநேயமற்றவர்கள் இன்றும் எஞ்சியிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நாம் எச்சரிக்கையுடன் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம்”  என்றார்.


முதல் பயணம்.. பாகிஸ்தான் பிரச்னை.. போராட்ட புத்தகம்.. பிரதமர் மோடியின் பங்களாதேஷ் ட்ரிப் ஹைலைட்ஸ்..

இந்தப் பேச்சையடுத்து  அவசரநிலைக்காலத்தில் மோடி பங்கேற்ற போராட்டங்கள் குறித்து அவர் எழுதி 1978-இல் பதிப்பிக்கப்பட்ட ’சங்கர்ஷ்மன் குஜராத்’ என்னும் புத்தகம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. புத்தகத்தின் முதல் பக்கத்தில் அவர் பொதுமக்களுக்கு கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் அச்சிடப்பட்டிருக்கிறது.

ஜனநாயகம் அழிக்கப்பட்டுவருவதால் இளைஞர்களைப் புதுவரலாறு படைக்க அழைப்புவிடுக்கும் வகையில் அவரது அந்தக் கடிதம் அமைந்திருக்கிறது. கூடவே 1971-இல் தான் குஜராத்தில் 1200 பெண்கள் உட்பட10,000 பாரதிய ஜன சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பங்களாதேஷை தனிநாடாக அங்கீகரிக்கக்கோரும் போராட்டத்தை அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டு மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி மெட்ரோவில் பறக்கலாம்! தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!
செங்கல்பட்டு மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி மெட்ரோவில் பறக்கலாம்! தமிழக அரசின் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... சம்பள உயர்வுக்கு ரெடியா இருங்க!
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... சம்பள உயர்வுக்கு ரெடியா இருங்க!
டிகிரி முடித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை! மிஸ் பண்ணாதீங்க... விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
டிகிரி முடித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை! மிஸ் பண்ணாதீங்க... விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
Embed widget