மேலும் அறிய

முதல் பயணம்.. பாகிஸ்தான் பிரச்னை.. போராட்ட புத்தகம்.. பிரதமர் மோடியின் பங்களாதேஷ் ட்ரிப் ஹைலைட்ஸ்..

“பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் நான் பங்கேற்றது எனது முதல் போராட்டங்களில் ஒன்று. அந்தச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட நானும் சில தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்"

கொரோனாவுக்குப் பிறகான பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதாலேயே அவரது நேற்றைய பங்களாதேஷ் பயணம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. உலகிலேயே அதிக நாடுகள் பயணம் செய்த பிரதமர் என்கிற பெருமை வேறு அவருக்கு இருப்பதால், ”இந்த லாக்டவுன் காலத்தில் அவர் எப்படிதான் முடங்கி இருந்தார்?” என அவரது விமானப்பயணத்தைக் குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் பறந்தன. பங்களாதேஷ் சுதந்திரப்போரின் ஐம்பதாவது ஆண்டு அனுசரிப்பு விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தார் அவர்.


முதல் பயணம்.. பாகிஸ்தான் பிரச்னை.. போராட்ட புத்தகம்.. பிரதமர் மோடியின் பங்களாதேஷ் ட்ரிப் ஹைலைட்ஸ்..அவரது மற்ற எந்த வெளிநாட்டுப் பயணங்களைப் போலதான் இதுவும் இருக்கும் என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு விழாவில் அவர் பேசியவை ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அமைந்தன. பாகிஸ்தானைக் குறித்த அவரது கருத்துகள் அதிர்ச்சி ரகம் என்றால், பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார் எனக் குறிப்பிட்டது, ஒட்டுமொத்த பங்களாதேஷ் மற்றும் இந்திய மக்களுக்கும் ஆச்சரியமூட்டும் தகவலாக இருந்தது.

" ”தன் நாட்டு மக்களையே பாகிஸ்தான் இனப்படுகொலை செய்தது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. அந்த மனிதநேயமற்றவர்கள் இன்றும் எஞ்சியிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நாம் எச்சரிக்கையுடன் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம்” "
-நரேந்திர மோடி

அவர் பேசியவற்றிலிருந்து சில முக்கியப் பகுதிகள், “பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் நான் பங்கேற்றது எனது முதல் போராட்டங்களில் ஒன்று. அந்தச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட நானும் சில தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பங்கு பொதுமக்கள் அனைவரும் அறிந்ததே. இரு நாடுகளும் இணைந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டியது தென்கிழக்கு ஆசியாவின் இன்றியமையாத தேவை” எனக் குறிப்பிட்டார்.

தனது பேச்சில் ஒட்டுமொத்தமாகப் பாகிஸ்தானைச் சாடிய மோடி ”தன் நாட்டு மக்களையே பாகிஸ்தான் இனப்படுகொலை செய்தது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. அந்த மனிதநேயமற்றவர்கள் இன்றும் எஞ்சியிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நாம் எச்சரிக்கையுடன் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம்”  என்றார்.


முதல் பயணம்.. பாகிஸ்தான் பிரச்னை.. போராட்ட புத்தகம்.. பிரதமர் மோடியின் பங்களாதேஷ் ட்ரிப் ஹைலைட்ஸ்..

இந்தப் பேச்சையடுத்து  அவசரநிலைக்காலத்தில் மோடி பங்கேற்ற போராட்டங்கள் குறித்து அவர் எழுதி 1978-இல் பதிப்பிக்கப்பட்ட ’சங்கர்ஷ்மன் குஜராத்’ என்னும் புத்தகம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. புத்தகத்தின் முதல் பக்கத்தில் அவர் பொதுமக்களுக்கு கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் அச்சிடப்பட்டிருக்கிறது.

ஜனநாயகம் அழிக்கப்பட்டுவருவதால் இளைஞர்களைப் புதுவரலாறு படைக்க அழைப்புவிடுக்கும் வகையில் அவரது அந்தக் கடிதம் அமைந்திருக்கிறது. கூடவே 1971-இல் தான் குஜராத்தில் 1200 பெண்கள் உட்பட10,000 பாரதிய ஜன சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பங்களாதேஷை தனிநாடாக அங்கீகரிக்கக்கோரும் போராட்டத்தை அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget