மேலும் அறிய

தஞ்சாவூரில் சோகம்: ஆற்றில் குளிக்கச் சென்ற 9ம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கபிஸ்தலம் அருகே கொள்ளிடம்  ஆற்றில் குளிக்கச் சென்ற 3-பள்ளி மாணவிகளில் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 மாணவிகளில் 2 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் மாயமானார். அவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டதால் பெரும் சோகம் ஏற்பட்டது.  

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே கொள்ளிடம்  ஆற்றில் குளிக்கச் சென்ற 3-பள்ளி மாணவிகளில் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே சருக்கை எடத்தெருவில் வசிப்பவர் அறிவழகன். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அறிவழகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள்கள் கனிஷ்மா (14), கேசவர்த்தினி (12). இவர்கள் இருவரும் பாட்டி வீடான சருக்கை எடத்தெருவில் வசித்து வந்தனர். 

இதில் கனிஷ்மா பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தங்கை கேசவர்த்தினி கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று சருக்கை அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக அறிவழகன் மகள்கள் கனிஷ்மா, கேசவர்த்தினி ஆகியோர் சென்றனர். இவர்களுடன் மேலும் அதே தெருவில் வசிக்கும் விவசாயக் தொழிலாளி மதியழகன் என்பவரின் மகள் உமையாள்புரம் மெட்ரிக் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த சகானா (9) என்பவரும் சென்றுள்ளார். 

இவர்கள் மூன்று பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் உள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதனால் மூன்று பேரும் அலறியுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு கரையில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்தனர். இதில் சிலர் ஆற்றில் குதித்து கேசவர்த்தினி மற்றும் சகானா ஆகிய இருவரை உயிருடன் மீட்டனர். 

ஆனால் தண்ணீரின் வேகத்தில் கனிஷ்மா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் பாபநாசம் தீயணைப்பு நிலையத்தினர், கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கனிஷ்மாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

ஆனால் கனிஷ்மா கிடைக்கவில்லை. இதனால் அவரது நிலை என்ன ஆனது என்பது குறித்து தெரியாத நிலையே நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற போது, அடித்து செல்லப்பட்ட கனிஷ்மாவின் உடலை இன்று பொதுமக்கள் உதவியுடன் மீட்ட தீயணைப்புத் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் கபிஸ்தலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆற்றில் குளிக்காதீர்கள் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எத்தனை எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆடிப் பெருக்கு நிகழ்ச்சிக்கு முதல்நாள் தஞ்சாவூர் பகுதியில் ஆற்றில் குளித்த இளைஞரும் அவரது தங்கை மகனும் ஆற்றில் தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் தஞ்சை மாவட்டத்தில் நடந்து வருகிறது. 

 

தலைப்பு செய்திகள்

நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TTV Statement : விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
Embed widget