மேலும் அறிய

அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோன்! தீடீரென வெடித்து சிதறல்... 2 பேர் பலி: தஞ்சை அருகே பரபரப்பு

அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தபோது பட்டாசு குடோன் வெடித்து சிதறி இரண்டு பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது உடன் இதுகுறித்து வட்டாத்திகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே இன்று காலை அனுமதி இன்றி இயங்கிய பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர். சம்பவ இடத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். 

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதி இன்றி வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தபோது பட்டாசு குடோன் வெடித்து சிதறி இரண்டு பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது உடன் இதுகுறித்து வட்டாத்திகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோன்! தீடீரென வெடித்து சிதறல்... 2 பேர் பலி: தஞ்சை அருகே பரபரப்பு

இதையடுத்து வாட்டாத்திக் கோட்டை போலீசார் மற்றும் ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன், திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கரம்பக்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சத்தியகீர்த்தி தலைமையில் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெடி விபத்தில் உடல் சிதறி  பலியான நெய்வேலி தென்பாதி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராசு (60), அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (18) ஆகியோர் உடலை மீட்டனர். 

பின்னர் இறந்த 2 பேரின் உடல்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தற்பொழுது திருவிழாகள் மற்றும் திருமண விழாக்கள் நடைபெறுவதால் நாட்டு வெடி அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போதுதான் 2 பேரும் வெடி வெடித்து இறந்துள்ளனர் என தெரிய வந்தது. மேலும் இடிபாடுகளில் சிக்கி இருந்த நதியா, கனகா, சுகன்யா, தவசீலன் ஆகிய நான்கு பேரும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோன்! தீடீரென வெடித்து சிதறல்... 2 பேர் பலி: தஞ்சை அருகே பரபரப்பு

விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட எஸ்.பி.,  ராஜாராம், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார்   ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன்,  மற்றும் வருவாய் துறையினர் சம்பவ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

வெடி விபத்து குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியதாவது: அனுமதி இன்றி இந்த நாட்டு வெடி கடை  நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  மழை பெய்ததால் வெடியினை  எடுத்து குடோனுக்குள் வைத்ததால் அதனால் அதிக அழுத்தம் ஏற்பட்டு வெடி விபத்து  ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த இடத்தின் உரிமையாளர் வர சொல்லியுள்ளோம் அவர் வந்த பிறகு தான் இது வெடி குடோனுக்காக  வாடகைக்கு கொடுக்கப்பட்டதா என்பது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.  இதுபோல் மாவட்டம் முழுவதும் அனுமதி இல்லாமல் செயல்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை மற்றும் வருவாய் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.  மேலும் பட்டாசு குடோன் விபத்து சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget