மேலும் அறிய

அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோன்! தீடீரென வெடித்து சிதறல்... 2 பேர் பலி: தஞ்சை அருகே பரபரப்பு

அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தபோது பட்டாசு குடோன் வெடித்து சிதறி இரண்டு பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது உடன் இதுகுறித்து வட்டாத்திகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே இன்று காலை அனுமதி இன்றி இயங்கிய பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர். சம்பவ இடத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். 

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதி இன்றி வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தபோது பட்டாசு குடோன் வெடித்து சிதறி இரண்டு பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது உடன் இதுகுறித்து வட்டாத்திகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோன்! தீடீரென வெடித்து சிதறல்... 2 பேர் பலி: தஞ்சை அருகே பரபரப்பு

இதையடுத்து வாட்டாத்திக் கோட்டை போலீசார் மற்றும் ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன், திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கரம்பக்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சத்தியகீர்த்தி தலைமையில் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெடி விபத்தில் உடல் சிதறி  பலியான நெய்வேலி தென்பாதி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராசு (60), அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (18) ஆகியோர் உடலை மீட்டனர். 

பின்னர் இறந்த 2 பேரின் உடல்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தற்பொழுது திருவிழாகள் மற்றும் திருமண விழாக்கள் நடைபெறுவதால் நாட்டு வெடி அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போதுதான் 2 பேரும் வெடி வெடித்து இறந்துள்ளனர் என தெரிய வந்தது. மேலும் இடிபாடுகளில் சிக்கி இருந்த நதியா, கனகா, சுகன்யா, தவசீலன் ஆகிய நான்கு பேரும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோன்! தீடீரென வெடித்து சிதறல்... 2 பேர் பலி: தஞ்சை அருகே பரபரப்பு

விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட எஸ்.பி.,  ராஜாராம், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார்   ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன்,  மற்றும் வருவாய் துறையினர் சம்பவ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

வெடி விபத்து குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியதாவது: அனுமதி இன்றி இந்த நாட்டு வெடி கடை  நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  மழை பெய்ததால் வெடியினை  எடுத்து குடோனுக்குள் வைத்ததால் அதனால் அதிக அழுத்தம் ஏற்பட்டு வெடி விபத்து  ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த இடத்தின் உரிமையாளர் வர சொல்லியுள்ளோம் அவர் வந்த பிறகு தான் இது வெடி குடோனுக்காக  வாடகைக்கு கொடுக்கப்பட்டதா என்பது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.  இதுபோல் மாவட்டம் முழுவதும் அனுமதி இல்லாமல் செயல்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை மற்றும் வருவாய் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.  மேலும் பட்டாசு குடோன் விபத்து சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget