மேலும் அறிய

உலகம் முழுவதும் பிரபலம் ஆன தஞ்சாவூர் ஓவியங்கள்

பல்வேறு கடவுளர் உருவங்கள் உருவாக்கப்படுகின்றன. முன்பு பெரிய அளவில் மட்டுமே வரைவார்கள். இப்போது மிகச் சிறிய அளவிலும் தஞ்சாவூர் ஓவியங்கள் செய்யப்படுகின்றன.

தஞ்சாவூர்: சோழ மன்னர்கள் காலத்தில் உருவான இந்த தஞ்சாவூர் பாணி ஓவியங்களை அடுத்தடுத்து வந்த மன்னர்களும் ஆதரித்தார்கள். இந்த மன்னர்களின் அரண்மனைகளை தஞ்சாவூர் ஓவியங்கள் அலங்கரித்தன.

ஓவியக் கலைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது தஞ்சாவூர் ஓவியம். இந்த ஓவியங்களின் வண்ணம் தீட்டும் முறையும், பொன்னிழைகளை ஓவியத்தில் முப்பரிமாண தோற்றம் வரும்படி செய்தலும் இதன் தனித்தன்மை.

தஞ்சாவூர் ஓவியங்கள் 16, 17, 18ம் நூற்றாண்டுகளில் தஞ்சாவூரை ஆண்ட நாயக்கர், மராட்டிய மன்னர்களின் ஆதரவுடன் வளர்ச்சியடைந்தது. தாவரப் பொருள்களிலிருந்து எடுக்கப்படும் சாயத்தையே இந்த ஓவியங்களுக்குப் பயன்படுத்தினர். இன்றும்  கலை ஆர்வமிக்கவர்களின் இல்லங்களை அலங்கரிக்கும் தஞ்சாவூர் ஓவியங்கள், நாம் வசிக்கும் வீட்டுக்கு தனி அந்தஸ்தை ஏற்படுத்தித் தருகிறது என்றால் மிகையில்லை.

இரண்டாவது துளஜா, அமரசிம்மன், சிவாஜி போன்ஸ்லே ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர் பாணி ஓவியக் கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் என அழைக்கப்படும் ஓவிய பாணி மராட்டிய மன்னர் பிரதாபசிம்மன் (1739 - 1763) காலத்தில் முழு உருவம் பெற்றது என வரலாற்று ஆய்வர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்பெல்லாம் ‘வெண்ணை உண்ணும் கிருஷ்ணன் , ஆலிலை மேல் குழந்தை கிருஷ்ணன்’, ‘இராமர் பட்டாபிசேகம்’, ‘தேவியர் உருவங்கள்’ போன்ற ஓவியங்கள் திரும்பத் திரும்ப படைக்கப்பட்டன. ஆனால் இப்போது பல்வேறு கடவுளர் உருவங்கள் உருவாக்கப்படுகின்றன. முன்பு பெரிய அளவில் மட்டுமே வரைவார்கள். இப்போது மிகச் சிறிய அளவிலும் தஞ்சாவூர் ஓவியங்கள் செய்யப்படுகின்றன.

இந்த வகை ஓவியங்கள் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்ட மரத்தில் வேலைப்பாடுகள் கொண்ட மரச் சட்டத்தின் நடுவில் அமைந்திருக்கும். இந்த சட்டமும்கூட ஓவியத்தின் ஒரு பகுதிதான்.  அந்த அளவுக்கு கவனத்துடனும், கலை நேர்த்தியுடனும் சட்டங்களை உருவாக்குகின்றனர்.

இந்த ஓவியங்களில் முக்கியமாக சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு, வெள்ளை நிறங்களையே பயன்படுத்தினர். சீமை சுண்ணாம்பையும், கோந்தையும் கொண்டு முப்பரிமாணத் தோற்றத்தில் ஆடை அணிகலன்களை உருவாக்குகின்றனர். பிறகு கண்ணாடி கற்களைப் பொருத்தி பொன் வண்ணக் கலவையை அதில் பூசுகின்றனர்.

மரப்பலகைகள், கண்ணாடிகள் என இருமுறைகளில் இவ்வகை ஓவியங்கள் வரையப்படுகின்றன. வரையப்படும் உருவங்கள் உருவ அளவில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். கடவுளின் உருவம்  பெரிய அளவில் கித்தானின் (கேன்வாஸ்) பெரும் பகுதியை நிறைத்திருக்கும்.  மற்ற உருவங்கள் ஓவியத்தின்  கீழ்ப்பகுதியில் வரிசையிலோ,  அல்லது ஒழுங்குடன் கூடிய குழுவாகவோ அமைந்திருக்கும். இந்த உருவங்கள் பருத்த, முழு நிறைவான தோற்றமுடையதாக இருக்கும். அவற்றில் முரட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு நளினம் கூடியதாக காணப்படும்.

இந்த ஓவியங்களின் பின்புல வண்ணம் கரும்பச்சை, அடர் நீலம், ஒளிர்சிவப்பு ஆகிய வண்ணங்களில் இருக்கும். நீலம், மஞ்சள், பச்சை அல்லது வெள்ளை வண்ணங்களில் மைய உருவங்கள் தீட்டப்படும். வண்ணங்கள் திடமான கலவையாகத் தீட்டப்படும். பெரும்பாலும் மா  அல்லது பலா பலகைகளில் தான் வரையப்படுகின்றன. அரசர் காலத்தில் அரண்மனையை அலங்கரித்த தஞ்சாவூர் ஓவியங்கள் இன்று உலகம் முழுவதும் கோலோச்சுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
Embed widget