மேலும் அறிய

பள்ளம் படுகுழியாக மாறியுள்ள புதுகல்விராயன்பேட்டை - சித்திரக்குடி சாலை; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

தஞ்சை மாவட்டம் புதுகல்விராயன் பேட்டை டூ சித்திரக்குடி வரையில் மிகவும் பழுதடைந்து வாகன ஓட்டுனர்களை அவதிக்குள்ளாகியுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் புதுகல்விராயன் பேட்டை டூ சித்திரக்குடி வரையில் மிகவும் பழுதடைந்து வாகன ஓட்டுனர்களை அவதிக்குள்ளாகியுள்ளது. தற்போது டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த சாலையில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தடுமாறி விழுந்த விபத்துக்குள்ளாகின்றனர்.

தஞ்சை மாவட்டம் புதுகல்விராயன்பேட்டையில் சாலையின் பல இடங்களில் பெரும் பள்ளங்கள் உருவாகி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளத்தில் தடுமாறி விழும் நிலை உள்ளது.

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி அருகே உள்ளது புதுகல்விராயன்பேட்டை. இப்பகுதியிலிருந்து சித்திரக்குடி செல்லும் சாலை மிகவும் சீர்கேடாக பள்ளம், படு குழியாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் வண்ணாரப்பேட்டை, 8. கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் உட்பட பல பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான கார், ஆட்டோ, லோடுவேன், லாரி, டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் சித்திரக்குடி, பூதலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பணி முடித்து இருச்சக்கர வாகனத்தில் இரவில் இந்த சாலை வழியாகத்தான் ஊருக்கு திரும்புகின்றனர்.

இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் இந்த சாலையில் பல இடங்கள் பழுதடைந்து உள்ளது. புது கல்விராயன் பேட்டையிலிருந்து சித்திரக்குடி வரை சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் சாலை பள்ளங்களாக மாறி உள்ளது. வலதுபுற சாலையிலும் பள்ளம் இருக்கிறது என்று இடதுபுறம் வந்தால் அங்கும் பள்ளங்கள் இருக்கிறது. இதனால் வாகனங்களும் பழுதாகின்றன.

இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கிடையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது தெரியாமல் பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி விழுந்த விபத்துக்குள்ளாகின்றனர்.

மேலும் சாலையின் இருபுறமும் பள்ளங்கள் இருப்பதால் எதிர் எதிரில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாத நிலையே உள்ளது. பணி முடிந்து வருபவர்கள் இதனால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே புது கல்வியராயன் பேட்டையிலிருந்து சித்திரக்குடி வரை பழுதான நிலையில் பள்ளமாக மாறியுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், இந்த சாலை வழியாகத்தான் தஞ்சாவூருக்கு செல்ல வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் சாலையில் அதிகளவில் பள்ளங்கள் இருபுறமும் உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பள்ளத்தில் தடுமாறில் வயலில் விழும் நிலையும் உள்ளது.

எனவே இந்த சாலையை அகலப்படுத்தி முழுமையாக சீரமைத்து தர வேண்டும். இதேபோல் ஆலக்குடி அருகே சிவகாமிபுரம் மெயின் ரோடும் மிகவும் பழுதடைந்து பெரிய அளவில் பள்ளங்களாக மாறி உள்ளது. இதையும் சீரமைக்க வேண்டும். இந்த பகுதிகள் வழியாகத்தான் வயலுக்கு தேவையான இடுபொருட்களை வாகனத்தில் கொண்டு வரும் நிலை உள்ளது. இந்த சாலைகளை முழுமையாக சீரமைத்து கொடுத்தால் விவசாயிகளும் பயன்பெறுவார்கள் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Embed widget