மேலும் அறிய

அமைதியான, உற்சாகமான புத்தாண்டு... விடிய, விடிய பாதுகாப்பு பணி மேற்கொண்ட போலீசார்

தஞ்சை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை விபத்தில்லாமல் அமைதியாகவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் கொண்டாடிட மாவட்ட போலீஸ் துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் முழுவதும் புத்தாண்டையொட்டி 1000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காதவாறு தீவிர கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.

இன்று ஆங்கில புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை நள்ளிரவில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து பொதுமக்கள் வரவேற்றனர். நட்சத்திர விடுதிகள்,ஓட்டல்கள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தது. இருப்பினும் வாலிபர்கள் மதுபோதையில் பைக்குகளில் வேகமாக தாறுமாறாக ஓட்டிவந்து விபத்தில் சிக்கும் சம்பவமும் கடந்த காலங்களில் ஆங்காங்கே நடந்தது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறும், மக்களை பாதுகாக்கும் வகையில் இந்தாண்டு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். 


அமைதியான, உற்சாகமான புத்தாண்டு... விடிய, விடிய பாதுகாப்பு பணி மேற்கொண்ட போலீசார்

அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை விபத்தில்லாமல் அமைதியாகவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் கொண்டாடிட மாவட்ட போலீஸ் துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் முழுவதும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், தியேட்டர், ஓட்டல், பூங்கா, பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்கள், சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முதல்நாள் இரவு முதல் இன்று வரை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஷிப்ட் முறையில் பணியாற்றினர்.

சில போலீசார் மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில்  சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சையில் முக்கிய சாலைகள் மட்டுமில்லாது அனைத்து சாலைகளிலும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக புறவழிச்சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

நள்ளிரவில் வாகன சோதனை தீவிரமாக இருக்கும். ஏனென்றால் சிலர் குடித்து விட்டு வேகமாக மோட்டார் சைக்கிளில் வருவர். அப்படி யாராவது வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் மோட்டார் சைக்கிள், கார் ரேசில் ஈடுபடுவதை தடுக்கவும் புறவழிச்சாலைகளில் சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த குழுவினர் அனைத்து முக்கிய சாலைகளையும் தீவிரமாக கண்காணித்தனர். ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறை எடுத்து தங்குவோரின் விவரங்களை முழுமையாக சரியான முறையில் பெற வேண்டும் என்று அந்தந்த உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். சந்தேகப்படும்படி யாராவது அறை புக் செய்ய வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினர்.

தெருக்களில் சந்தேக ஆட்கள் நடமாட்டம் இருந்தாலும் உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டை யொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் ரகசியமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் தஞ்சை பெரிய கோயில், ரயில் நிலையம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். இன்று மாலை வேளையில் வாலிபர்கள் மது போதையில் எவ்வித பிரச்னையும் செய்யாத வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
Russia Accepts Taliban: தாலிபான்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஷ்யா; முதல் முறையா என்ன செஞ்சாங்க தெரியுமா.?
தாலிபான்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஷ்யா; முதல் முறையா என்ன செஞ்சாங்க தெரியுமா.?
Ponmudi Case HC Warning: “ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
“ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
Jamie Smith: தலைதூக்கும் இங்கிலாந்து.. ஜேமி ஸ்மித் அபார சதம்.. திணறும் இந்திய பவுலிங்!
Jamie Smith: தலைதூக்கும் இங்கிலாந்து.. ஜேமி ஸ்மித் அபார சதம்.. திணறும் இந்திய பவுலிங்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
Russia Accepts Taliban: தாலிபான்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஷ்யா; முதல் முறையா என்ன செஞ்சாங்க தெரியுமா.?
தாலிபான்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஷ்யா; முதல் முறையா என்ன செஞ்சாங்க தெரியுமா.?
Ponmudi Case HC Warning: “ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
“ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
Jamie Smith: தலைதூக்கும் இங்கிலாந்து.. ஜேமி ஸ்மித் அபார சதம்.. திணறும் இந்திய பவுலிங்!
Jamie Smith: தலைதூக்கும் இங்கிலாந்து.. ஜேமி ஸ்மித் அபார சதம்.. திணறும் இந்திய பவுலிங்!
TVK Vijay: நீங்க போறீங்களா.. இல்ல.. சினிமா பாணியில் மு.க.ஸ்டாலினை எச்சரித்த விஜய்!
TVK Vijay: நீங்க போறீங்களா.. இல்ல.. சினிமா பாணியில் மு.க.ஸ்டாலினை எச்சரித்த விஜய்!
Trump on Hamas: ''ஹமாஸோட முடிவு இன்னும் 24 மணி நேரத்துல தெரிஞ்சுடும்''; ட்ரம்ப் கூறியது எதைப் பற்றி தெரியுமா.?
''ஹமாஸோட முடிவு இன்னும் 24 மணி நேரத்துல தெரிஞ்சுடும்''; ட்ரம்ப் கூறியது எதைப் பற்றி தெரியுமா.?
விஜய் அதிரடி முடிவு! 2026 தேர்தலில் தனித்து போட்டி? 234 தொகுதிகளிலும் ஒரே சின்னம்! திமுக, பாஜகவுக்கு ஷாக்!
விஜய் அதிரடி முடிவு! 2026 தேர்தலில் தனித்து போட்டி? 234 தொகுதிகளிலும் ஒரே சின்னம்! திமுக, பாஜகவுக்கு ஷாக்!
சொல்லாததையும் செய்த டிஎன்பிஎஸ்சி; ஓராண்டில் 17,702 பேருக்கு அரசுப் பணி- கூடுதலாக 2,500 காலியிடங்களை நிரப்பத் திட்டம்!
சொல்லாததையும் செய்த டிஎன்பிஎஸ்சி; ஓராண்டில் 17,702 பேருக்கு அரசுப் பணி- கூடுதலாக 2,500 காலியிடங்களை நிரப்பத் திட்டம்!
Embed widget