மேலும் அறிய

பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்ட தனிஷ்க் ஷோரூம்: முதல்முறையாக வைரங்கள் தரம் பார்க்கும் இயந்திரம்

3500 சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமான முறையில் புதுப்பித்து புதுப்பொலிவுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.

தஞ்சாவூா்: வர்த்தகத்தில் முன்னேற்றத்தை கண்டு வரும் தஞ்சையில் பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்ட தனிஷ்க் ஷோரூம் திறப்பு விழா நடந்தது. நடுத்தர குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

டாடா குழுமத்தை சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமான " தனிஷ்க்" தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகில் காந்திஜி சாலையில் தனது மிகப்பெரிய கிளையை 3500 சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமான முறையில் புதுப்பித்து புதுப்பொலிவுடன் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட தனிஷ்க் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. விற்பனை நிலையத்தை டைட்டன் நிறுவனத்தின் ( தெற்கு மண்டலம்) நிதிப் பிரிவு தலைவர் ஜனார்த்தன பாய் திறந்து வைத்தார். 


பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்ட தனிஷ்க் ஷோரூம்: முதல்முறையாக வைரங்கள் தரம் பார்க்கும் இயந்திரம்

நிகழ்ச்சிக்கு சர்க்கிள் பிஸ்னஸ் மேனேஜர் சந்திரசேகர், நிர்வாக இயக்குனர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுப்பிக்கப்பட்ட பிரமாண்டமான தனிஷ்க் ஷோரூமில் தரைதளத்தில் நகைகள் அணிவரிசையை தொட்டு உணரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. முதல்தளத்தில் வைரநகைகளின் அணிவரிசை கண்ணை பறிக்கிறது. 2ம் தளத்தில் திருமண நகை வரிசைகள் உள்ளன. தஞ்சை மாவட்டத்திலேயே முதல்முறையாக வைரத்தின் நிறம், தரம் ஆகியவற்றை துல்லியமாக பார்க்கும் இயந்திரம் செயல்பாட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளது.  

இதுகுறித்து தனிஷ்க் நிர்வாகத்தினர் கூறுகையில், தஞ்சாவூரில் தனிஷ்க் விற்பனை நிலையத்தை முன்பை விட இன்னும் பிரம்மாண்டமாகவும் மேம்பட்ட நவீன வசதிகளுடனும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்திலிருந்து இந்தியாவில் மிக அதிகம் நேசிக்கப்படும் நகை பிராண்டாக தனிஷ்க் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது . இது பெரும் பாரம்பரியமிக்க டாடா குழுமத்தின் ஒரு அங்கமாகும். மிக நுணுக்கமான கைவினை திறன், பிரத்தியேகமான வடிவமைப்பு, உயரிய மற்றும் உத்தரவாதம் மிக்க தரம் ஆகியவற்றுடன் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நற்பெயர் பெற்று திகழ்கிறது. தனிஷ்க் இந்திய பெண்களின் நகை தேவைகளை மற்றும் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டும் அவற்றை பூர்த்தி செய்யும் நகை தொகுப்புகளை வழங்குகிறது. இந்திய பெண்களின் ரசனை, விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் பாரம்பரியமிக்க மற்றும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்றவாறு நகைகளை வடிவமைத்து விற்பனை செய்யும் தனி சிறப்புமிக்க ஒரே நகை நிறுவனம் தனிஷ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக தூய்மையான நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக தனிஷ்க் விற்பனையகங்களில் அதிநவீன காரட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில் வாடிக்கையாளர்கள் நகைகளின் தூய்மை தன்மை குறித்து வெளிப்படை தன்மையுடன் பரிசோதித்து அறிந்து கொள்ளலாம் . தற்போது 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் 500-க்கும் மேற்பட்ட  சில்லறை விற்பனை நிலையங்கள் தனிஷ்கிற்கு உள்ளன. தனிஷ்க் நகைகளின் தனித்துவமான வடிவமைப்புகளிலான நகைகள் கிடைக்கும் . ஜொலிக்கும் தங்க நகைகள், மின்னும் வைரம், குந்தன் மற்றும் போல்கி நகைகள் என பல வகை ஆபரணங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
 
திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு சலுகையாக தனிஷ்க் வாடிக்கையாளர்கள் இங்கு வாங்கும் நகைகளுக்கு தங்க நாணயம் வழங்கும் திட்டம் நாளை 24-ம் தேதி வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறுசேமிப்பு திட்டத்தில் பங்குபெறுபவர்கள் வாங்கும் நகைகளுக்கு செய்கூலியில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தரமான தூய்மையான நகைகளை நடுத்தர மக்களும் வாங்கி பயன்பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டு வரும் தஞ்சாவூருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக தனிஷ்க் மிகவும் பிரமாண்டமாகவும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டும் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கிய ஷோரூமாக மாற்றி உள்ளது. 

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Embed widget