மேலும் அறிய

வடூவூரில் புதிய உள் விளையாட்டு அரங்கம் திறப்பு; அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் செங்கல் பரிசளிப்பு

வடுவூரில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்பதை அந்த பகுதி விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்தியாவிலேயே முதல்முறையாக கிராமப் பகுதியில் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது எய்ம்ஸ் என பொறிக்கப்பட்டு செங்கல் போன்ற வடிவமைப்பு கொண்ட கேடயம் வழங்கப்பட்டது.
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடூவூரில் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சர்வதேச தேசிய மாநில அளவில் கபடி வாலிபால் தொடர் ஓட்டம் கராத்தே என பல்வேறு போட்டியில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்று தமிழகத்துக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் வீரர்கள் வீராங்கனைகளை தந்து வருகிறது ஊர் வடுவூர்.
 
வடுவூரில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்பதை அந்த பகுதி விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் வடுவூர் கிராம மக்களின் சார்பில் நிலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய ரயில்வே நிலை குழு தலைவராக இருந்த டி ஆர் பாலு சந்தித்த வடுவர் விளையாட்டு கழகத்தினர் பொதுமக்கள் அந்த ஊரில் விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்று தர வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர். இதை அடுத்து மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தில் அந்த மனுவை அளித்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டார் டி ஆர் பாலு. இதைத் தொடர்ந்து இந்தியாவிலேயே முதல்முறையாக கிராமப் பகுதிக்கு என உன் விளையாட்டரங்கம் அமைக்க ஒப்புதல் அளித்து 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு. 

வடூவூரில் புதிய உள் விளையாட்டு அரங்கம் திறப்பு; அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் செங்கல் பரிசளிப்பு
 
இதை அடுத்த சும்மா 2400 சதுர மீட்டரில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் தரைத்தளம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேப்பில் உட் என்ற மரக்கட்டைகளால் அமைந்துள்ளது. இந்த விளையாட்டரங்கத்தில் கபாடி, வாலிபால், கூடைப்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், சிலம்பம், கராத்தே, சதுரங்கம், கேரம், யோகா உள்பட பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கவும் போட்டிகள் நடத்தும் வகையிலும் இந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளை ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அலுவலகத்துக்கும் சிறப்பு விருந்தினர் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் தங்கவும் உடைமாற்றம் தனித்தனி அறைகளும், கழிவறைகள், குளியலறைகள், உடற்பயிற்சி கூடம், நடை பயிற்சி பாதை என அனைத்து வசதிகளும் உள்ளன தற்பொழுது விளையாட்டு அரங்கிற்கான பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.
 
இந்த விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சக்கரபாணி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா, ஏராளமான விளையாட்டு வீரர்கள், கிராம மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .மேலும் அப்போது  எய்ம்ஸ் என பொறிக்கப்பட்ட செங்கல் போன்ற கேடயத்தை டி.ஆர்.பி.ராஜா உதயநிதியிடம் வழங்கினார்.
 
திருவாரூர் மாவட்டத்தில் 7 கோடி மதிப்பில் இந்த உள் விளையாட்டு அரங்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget