மேலும் அறிய

கும்பகோணத்தில் சாலையில் பாய் விரித்து படுக்கும் நூதன போராட்டம் - அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை

’’தங்குவதற்கு போதுமான இடவசதிகள் கூட இல்லாததால், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தும் வகையில் பாயை விரித்து சாலையில் போட்டு நுாதன முறையில் போராட்டம்’’

கும்பகோணம் பெரும்பாண்டி பகுதியில் உள்ள ஆட்டோ நகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீர் செய்யவும், சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்திடவும் வலியுறுத்தி அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் பாயை விரித்து படுத்து நுாதன முறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் பெரும்பாண்டி பகுதியில் உள்ள ஆட்டோ நகரில் மிகவும் நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள 5 தெருக்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய்களை பதிப்பதற்காக நகராட்சி நிர்வாகம் சிமெண்ட் சாலைகள் மற்றும் சாக்கடைகளை பெயர்த்து எடுத்து புதிதாக குழாய்களை பதிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது ஆட்டோ நகரில் உள்ள 5 தெருக்களிலும் இருந்த சாலைகளும் கழிவுநீர் சாக்கடைகளும் முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்த பல மாதங்கள் ஆன நிலையில் இந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கழிவு நீர் சாக்கடைகளை முழுமையாக சீரமைக்காததால், கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக சாக்கடைகள் நிரம்பி கழிவு நீர் மற்றும் மழைநீர்  தெருக்களில் வழிந்தோடுகிறது.


கும்பகோணத்தில் சாலையில் பாய் விரித்து படுக்கும் நூதன போராட்டம் - அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை

மேலும் இந்த பகுதியில் தேங்கி நிற்கும் அசுத்தமான கழிவுநீரில்  கொசுக்கள் உற்பத்தியாகி, இந்த பகுதியில் வசிக்கும் பலர் டெங்கு மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம்காட்டி வருகின்றனர். இந்நிலையில் சாலை மற்றும் கழிவுநீர் சாக்கடைகளை சீரமைக்க வலியுறுத்தியும் இந்த பகுதியில் புதியதாக கழிப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தியும், கும்பகோணம் - சென்னை சாலையில் ஆட்டோ நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது தங்குவதற்கு போதுமான இடவசதிகள் கூட இல்லாததால், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தும் வகையில் பாயை விரித்து சாலையில் போட்டு நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கும்பகோணத்தில் சாலையில் பாய் விரித்து படுக்கும் நூதன போராட்டம் - அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை

இதனால் கும்பகோணம் சென்னை சாலையில் ஒரு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், போலீசார், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஆட்டோ நகர் பகுதியில் நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக நடைபெற்ற போது, கழிவு நீர் சாக்கடைகளை சேதப்படத்தின. இதனால் தொடர்ந்து பெய்து வரும் மழையினால், மழை நீர் வடியாமல் தேங்கியது. வீடுகளுக்குள்ளும், கழிவறைகளிலும் நீர் நிரம்பியதால், சொந்த வீட்டிலேயே தங்க முடியாத நிலை ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளாததால், அவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில், கும்பகோணம்-சென்னை சாலையின் நடுவில் கோரைப்பாயை தரையில் விரித்து படுத்து, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்கள் பகுதியில் உடனடியாக சீர் செய்யாவிட்டால், போராட்டத்தை தொடர்ந்து செய்வோம் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget