மேலும் அறிய

ஆடுகளை கிடை அமர்த்தி இயற்கை உரமேற்றும் டெல்டா விவசாயிகள்

அறுவடை முடிந்த விளை நிலங்களில் உரமேற்ற செம்மறி ஆடுகளை ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் களமிறக்கியுள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி, என 3 போகம் சாகுபடி செய்து வந்தனர்.  இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக  மேட்டூர் அணை குறித்த நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினாலும்,  போதிய மழை பெய்யாத காரணத்தினாலும், உரம்  உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு காரணமாகவும், மூன்று போக சாகுபடி என்பது  ஒரு போக சம்பா சாகுபடியை மட்டும், விவசாயிகள் செய்து வந்தனர்.  இந்நிலையில்  பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது, அதன் காரணமாக கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி என்பது செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி இன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதன் காரணமாக  மூன்று போகம் சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
இந் நிலையில் டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலும், நாகை மாவட்டத்தில் இவ்வாண்டு 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும், இதே போன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில், குறுவை சாகுபடி செய்வதற்கு அப்பகுதி விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்காக திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது வயல்களை தயார்படுத்தி வருகின்றனர்.

ஆடுகளை கிடை அமர்த்தி இயற்கை உரமேற்றும் டெல்டா விவசாயிகள்
 
ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி  இதுவரை திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில்  70,000 ஏக்கர்  பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மேட்டூர் அணையை நம்பி இருக்கும் விவசாயிகள் தண்ணீருக்காக காத்திருக்கின்றனர். குறிப்பாக அறுவடை முடிந்த விளை நிலங்களில் உரமேற்ற செம்மறி ஆடுகளை ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் களமிறக்கியுள்ளனர். வயல்களில் களம் இறக்கப்பட்டு உள்ள செம்மறி ஆடுகள் அறுவடைக்குப்பின் வாய்க்கால் வரப்புகளில் கிடைக்கும் பச்சை புல் பூண்டுகளை மேய்ந்து ஆட்டுக் கழிவான புழுக்கைகளை வயலில் இடுகின்றன. இயற்கை உரம் மேற்றி வளம் சேர்க்க செம்மறி ஆடுகள் மேய்ச்சலுக்கு கடைமடை பகுதியில் விடப்பட்டுள்ளதால், இவ்வாண்டு இயற்கை உரம் தாராளமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளனர். மேலும் ஆடுகளின் கழிவுகள் ரசாயன உரத்தைவிட உயர்வானது என்றும் இதன் வாயிலாக மண் வளம் அதிகரிக்கும் என்றும்  வாய்க்கால் வரப்புகளில் படர்ந்துள்ள பச்சை புல்களை வாயாற உண்டு வயல் நெடுக கழிவுகளை இறைக்கும் ஆடுகளால் நெல் விளைச்சல் பெருகும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் தனியார் உரக் கடைகளில் உரம், டிஏபி, உள்ளிட்ட இடு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வயல்களுக்கு இயற்கை உரம் இந்த ஆண்டு அதிக அளவில் கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் தனியார் கடைகளில் உரங்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தலைப்பு செய்திகள்

ஏமாந்திடாதீங்க... என் பெயரில் போலி செல்போன் அழைப்புகள்: தஞ்சை ஆட்சியர் ரேவதி எச்சரிக்கை
ஏமாந்திடாதீங்க... என் பெயரில் போலி செல்போன் அழைப்புகள்: தஞ்சை ஆட்சியர் ரேவதி எச்சரிக்கை
எச்சரிக்கை பலகையும் இல்லை... ரிப்ளெக்டரும் இல்லை: வேகத்தடை இருப்பதும் தெரியவில்லை
எச்சரிக்கை பலகையும் இல்லை... ரிப்ளெக்டரும் இல்லை: வேகத்தடை இருப்பதும் தெரியவில்லை
களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
தஞ்சையில் டிராபிக் போலீசாரின் அதிரடி: பேருந்துகளில் இருந்து 100-க்கும் அதிகமான ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்து அழிப்பு
தஞ்சையில் டிராபிக் போலீசாரின் அதிரடி: பேருந்துகளில் இருந்து 100-க்கும் அதிகமான ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்து அழிப்பு

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
Embed widget