மேலும் அறிய

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல்

மாநகராட்சியில் 94,517 ஆண்களும், 1,04,062 பெண்களும், 18 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1,98,597 வாக்காளர்கள் உள்ளனர்

தஞ்சாவூர் மாநகராட்சி விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே உள்ள 51 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலுள்ள பழைமையான நகராட்சிகளில் ஒன்றான தஞ்சாவூர் நகராட்சி 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. என்றாலும், நகராட்சியாக இருந்த காலத்தில் உள்ள 51 வார்டுகளே, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டும் நீடிக்கிறது. தஞ்சாவூர் மாநகராட்சியை விரிவாக்கம் செய்யப்படுவதாகச் சட்டமன்றக்கூட்டத்தில், கடந்த 2021, ஆகஸ்ட் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல்

 

இதற்காக வல்லம் பேரூராட்சியையும், சுற்றியுள்ள 13 ஊராட்சிகளை முழுமையாகவும், 2 ஊராட்சிகளைப் பகுதியாகவும் இணைத்து, வார்டுகளின் எண்ணிக்கையை 69 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டது.ஆனால், தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்க வல்லம் பேரூராட்சி, சில ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனவே, விரிவாக்கத் திட்டம் நிலுவையில் இருந்து வருகிறது.தற்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே உள்ள 51 வார்டுகளுக்கு மட்டுமே தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல்

இதில், 2 மற்றும் 7 ஆவது வார்டுகள் எஸ்.சி. பொதுப் பிரிவினருக்கும், 6, 13, 21 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும் என மொத்தம் 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  மேலும், 3, 4, 5, 14, 15, 18, 22, 26, 27, 28, 29, 33, 35, 36, 37, 38, 39, 42, 43, 44, 48, 49, 50 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுப் பிரிவினருக்கும், 1, 8, 9, 10, 11, 12, 16, 17, 19, 20, 23, 24, 25, 30, 31, 32, 34, 40, 41, 45, 46, 47, 51 ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 51 வார்டுகளில் பெண்களுக்கு 26 வார்டுகளிலும், ஆண்களுக்கு 25 வார்டுகளிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இம்மாநகராட்சியில் 94,517 ஆண்களும், 1,04,062 பெண்களும், 18 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1,98,597 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாகத் தஞ்சாவூர் மாநகரில் உத்தேசமாக 196 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.


நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல்

தஞ்சாவூர் மாநகராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையர் க. சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக 1 முதல் 10 வரையிலான வார்டுகளுக்கு மாநகராட்சி செயற் பொறியாளர் எஸ். ஜெகதீசன், 11 முதல் 20 வரையிலான வார்டுகளுக்கு இளநிலைப் பொறியாளர் பி. பாபு, 21 முதல் 30 வரையிலான வார்டுகளுக்கு இளநிலைப் பொறியாளர் எஸ். ஆறுமுகம், 31 முதல் 40 வரையிலான வார்டுகளுக்கு உதவிப் பொறியாளர் என். ரமேஷ், 41 முதல் 51 வரையிலான வார்டுகளுக்கு உதவிச் செயற் பொறியாளர் எம். ராஜசேகரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பழங்காலத்திலிருந்தே முக்கியத்துவம் பெற்ற வல்லம் பேரூராட்சி வல்லம் பேரூராட்சி 134 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இந்தப் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், வல்லம் பேரூராட்சிக்குத் தனியாகவே தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் மூலம் இணைப்புத் திட்டம் இப்போதைக்கு இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget