மேலும் அறிய

தஞ்சை அருகே ரூ.44.59 லட்சம் கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 2 பேர் சிக்கினர்

பஸ் வாண்டையார் இருப்பு நிறுத்தத்தில் நின்ற போது, அதே பஸ்சில் பயணம் செய்த ஒருவர், அர்ஜூன், பிரதீபனிடம் தன்னை போலீஸ் என்று கூறி உங்களிடம் விசாரிக்க வேண்டும் என இருவரையும் பஸ்சிலிருந்து இறக்கியுள்ளார்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ரூ.44.59 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 2 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர்.

தஞ்சாவூர் அருகே அடகுகடையை சேர்ந்தவர்களை பஸ்சிலிருந்து இறக்கி ரூ.44.59 லட்சத்தை பறித்து சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவரது பார்ட்னர் ரமேஷ். இவர்கள் இருவரும், மன்னார்குடி பெரிய கம்மாளர் தெருவில் நகை அடகு கடை வைத்துள்ளனர். கடந்த டிச.8ம் தேதி, ரமேஷ், தன் தம்பி அர்ஜூன் (19), மற்றும் கடையில் வேலை பார்க்கும் பிரதீபன் (22) ஆகியோரை காரில் தஞ்சாவூருக்கு அழைத்து வந்தார். பின்னர் தஞ்சாவூரில் நகை விற்பனை செய்த பணம் ரூ. 44.59 லட்சத்தை வாங்கிக் கொண்டு அர்ஜூன் மற்றும் பிரதீபன் ஆகியோர், மன்னார்குடிக்கு தனியார் பஸ்சில் புறப்பட்டனர்.

பஸ் வாண்டையார் இருப்பு நிறுத்தத்தில் நின்ற போது, அதே பஸ்சில் பயணம் செய்த ஒருவர், அர்ஜூன், பிரதீபனிடம் தன்னை போலீஸ் என்று கூறி உங்களிடம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்து இருவரையும் பஸ்சிலிருந்து இறக்கியுள்ளார். அப்போது, அங்கு பைக்கில் வந்த மற்றொரு நபர் தன்னையும் போலீஸ் என கூறி, அர்ஜூன், பிரதீபன் இருவரையும் மிரட்டி, அவர்கள் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கார்த்தி தஞ்சாவூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். 

இதில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் கடை ஊழியர் பிரதீபனுக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிரதீபன் தனது மாமா ரஞ்சித் மூலம் பணத்தை திருட திட்டம் தீட்டியுள்ளார் என்பதும், ரஞ்சித் தனது நண்பர் கோபியுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

மேலும் ரஞ்சித் மற்றும் கோபி இருவரும் திருச்சிக்கு தப்பிச் செல்ல பாபநாசம் அருகே உடையார்கோவில் பகுதியை சேர்ந்த குமார் (39), சாலியமங்கலம் முகமது தௌபிக் (37), கூத்தாநல்லுார் பகுதியை சேர்ந்த ராசாத்தி (30) ஆகியோர் தப்பி செல்ல உதவியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

தொடர்ந்து பிரதீபன், குமார், முகமது தௌபிக், ராசாத்தி நான்கு பேரையும் தாலுகா போலீசார் கடந்த டிச.12ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் பணத்துடன் தலைமறைவாக ரஞ்சித், கோபி இருவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைமறைவாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் பகுதியை கோபி (32)  போலீசில் சரண் அடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில், திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லுார் பகுதியை சேர்ந்த ரஞ்சித்(36) கோவையில் இருந்ததை அறிந்த தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரஞ்சித்திடம் இருந்து ரூ.37 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
CM Stalin on TAPS: புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
CM Stalin on TAPS: புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
குடும்பத்தை விட்டு பிரிய வேண்டாம்... உங்க சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு: முழு விபரங்கள் இங்கே!!!
குடும்பத்தை விட்டு பிரிய வேண்டாம்... உங்க சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு: முழு விபரங்கள் இங்கே!!!
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
Yamaha Fascino 125 vs Yamaha Ray ZR 125.. இரண்டில் எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்? எது வாங்கலாம்?
Yamaha Fascino 125 vs Yamaha Ray ZR 125.. இரண்டில் எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்? எது வாங்கலாம்?
TN Govt Pesnison Scheme: பழைய ஓய்வூதியம் Vs தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் - வித்தியாசம் என்ன? ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
TN Govt Pesnison Scheme: பழைய ஓய்வூதியம் Vs தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் - வித்தியாசம் என்ன? ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
Embed widget