மேலும் அறிய

சீர்காழியில் பள்ளி குழந்தைகள் 15 பேருக்கு வாந்தி, மயக்கம் - நேரில் ஆறுதல் கூறிய ஆட்சியர்

மாணவர்களுக்கு வீட்டில் வழங்கப்பட்ட உணவில் குறைபாடா அல்லது குடிநீரில் குறைபாடு உள்ளதா என பல்வேறு கோணங்களில் நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்

சீர்காழி அருகே நகராட்சி தொடக்கப் பள்ளியில் பயிலும் 15 மாணவ,மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இந்த ஆண்டு சுமார் 17 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தோட்டமானியம், புளிச்சக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 


சீர்காழியில் பள்ளி குழந்தைகள் 15 பேருக்கு வாந்தி, மயக்கம் - நேரில் ஆறுதல் கூறிய ஆட்சியர்

இந்நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் இந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தோட்டம் மானியம் பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பை சேர்ந்த 7 வயதான மாணவி பவதாரணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த யாழினி, கனிஷ்கா, அனுஷ்கா ஆகியோர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்  பள்ளியில் பயின்ற 15 மாணவர்களையும் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Dhanush Viral Photos: ஹாலிவுட் எண்ட்ரி.. தி கிரே மேனின் உச்சக்கட்ட பிரோமோஷன்.. வைரலாகும் தனுஷ் போட்டோஸ்..!


சீர்காழியில் பள்ளி குழந்தைகள் 15 பேருக்கு வாந்தி, மயக்கம் - நேரில் ஆறுதல் கூறிய ஆட்சியர்

இதில் பவதாரணி, யாழினி, கனிஷ்கா, அனுஷ்கா உள்ளிட்ட 5 மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பெற்றோர்கள் ஏராளமான சீர்காழி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். 


சீர்காழியில் பள்ளி குழந்தைகள் 15 பேருக்கு வாந்தி, மயக்கம் - நேரில் ஆறுதல் கூறிய ஆட்சியர்

கல், ஜல்லி போன்ற சிறு கனிமங்களை கொண்டு செல்ல இருந்த வாய் மொழி தடை நீக்கம் - உயர்நீதிமன்றம் மதுரை கிளை

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டிகள், உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் டைபாய்டு, காலரா போன்ற நோயால் பாதிக்கப்படவில்லை என்றும் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார். மேலும், குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களை கேட்டுக் கொண்டனர். 


சீர்காழியில் பள்ளி குழந்தைகள் 15 பேருக்கு வாந்தி, மயக்கம் - நேரில் ஆறுதல் கூறிய ஆட்சியர்

மாணவர்களுக்கு வீட்டில் வழங்கப்பட்ட உணவில் குறைபாடா அல்லது குடிநீரில் குறைபாடு உள்ளதா என பல்வேறு கோணங்களில் நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget