மேலும் அறிய

World Population Day 2021 | மக்கள் தொகையைப் பொறுத்தவரை, தமிழ்நாடு சந்திக்க இருக்கும் சவால்கள் என்ன?

2036-ஆம் ஆண்டில், மாநிலத்தின் சராசரி வயது 40-ஆக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகவும் முதுமையான மாநிலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இன்று உலக மக்கட்தொகை  தினம் கொண்டாடப்படுகிறது. நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. இருப்பினும், மக்கள்தொகை தொடர்பான இலாபத்தைப் பெற பல சவால்களை மாநிலம் சந்திக்க வேண்டியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2036-ஆம் ஆண்டில், மாநிலத்தின் சராசரி வயது 40 ஆக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகவும் முதுமையான மாநிலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011 கணக்கெடுப்பில், முதுமையான மாநிலமாக விளங்கிய கேரளாவை தமிழ்நாடு முந்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். 

பொதுவாக, ஒரு சமூகத்தில் 0-14 வயதுடைய குழந்தைகளும், 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களும் பொருளாதார ரீதியாக பிறரை சார்ந்துள்ளனர். சார்புநிலை விகிதம் என்பது, வேலை செய்ய இயலாத வயதினரை, வேலை செய்ய இயலும் வயதினருடன் ஒப்பிடும் எண்ணிக்கை ஆகும். 


World Population Day 2021 | மக்கள் தொகையைப் பொறுத்தவரை, தமிழ்நாடு சந்திக்க இருக்கும் சவால்கள் என்ன?

2036ல் தமிழ்நாட்டில் வேலை செய்ய இயலாத வயது பிரவினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. மொத்த சார்புநிலை விகிதம் 571 என்று கணிக்கப்படுகிறது. அதாவது, ஆயிரம் பேரில் 571 பேர் சராசரியாக வேலைசெய்ய இயலாத வயதுக்குள் உள்ளனர். இதில், குழந்தைகள் சார்புநிலை விகிதம் 244 என்றும், முதியவர்கள் சார்பு நிலை விகிதம் 327 என்றும் கூறப்படுகிறது.  (2011ல்  முதியவர்கள் சார்பு நிலை விகிதம் - 160)

எனவே, எதிர்காலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க  இருப்பதால், பொருளாதார அடிப்படை கட்டமைப்பை மாற்ற வேண்டிய மிகப்பெரிய சவாலை தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கிறது. 


World Population Day 2021 | மக்கள் தொகையைப் பொறுத்தவரை, தமிழ்நாடு சந்திக்க இருக்கும் சவால்கள் என்ன?  

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி;கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா,கோவா, பஞ்சாப், இமாச்சல் பிரேதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் அதிகளவிலான முதியவர்கள் சார்பு நிலை விகிதத்தைக் கொண்டுள்ளன. எனவே, வரும் நாட்களில் முதியவர்களின் நலனை பேணிக்காக்கும் விதமாக மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, முதியவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையில் நலவுதவித் திட்டங்களை வகுப்பது முக்கியமானதாகும்.    

முதியவர்கள் நலனை பேணிக்காக்க வேண்டும்: 

தற்போது, 60 வயதுக்கு மேல் உள்ள வயது பிரிவினரில், 5.7 சதவிகிதம் பேர் எந்தவித குடும்ப ஆதரவின்றி தனித்து வாழ்ந்து வருவதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கிறது . 45, வயதுக்கு மேற்பட்டவர்களில் 3.7% பேர் தனித்து வாழ்வதாக கூறப்படுகிறது. 

45 வயதுக்கு மேல் உள்ள வயது பிரிவினரில் அதிகமானோர் தனித்து வாழும் இந்திய மாநிலங்களுள் முதன்மையானதாக தமிழ்நாடு உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களில், 8.5% பேர் தமிழ்நாட்டில் தனித்து வாழ்ந்து வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் இந்த எண்ணிக்கை 3.3% ஆக உள்ளது. விவாகரத்து, கணவனை இழந்த பெண்/ மனைவியை இழந்த கணவன், திருமணம் செய்து கொள்ளதாது போன்ற காரனங்களால் தனித்து வாழ்கின்றனர். மனஅழுத்தம், பதற்றம், மனசோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற மனநல பிரச்னைகள் போன்ற பிரச்னைகளுக்கு இவர்கள் உள்ளாகி வருகின்றனர். எனவே, பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த பல சிக்கல்களையும் தமிழ்நாடு சந்திக்க இருக்கிறது.     

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget