Women Entitlement Scheme : கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் ; OTP எண் கேட்கப்பட்டால் எவரும் பகிரவேண்டாம்... ஆட்சியர் அறிவுறுத்தல்
Kalaignar Magalir Thittam : கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் ; OTP எண் கேட்கப்பட்டால் எவரும் பகிரவேண்டாம்... ஆட்சியர் அறிவுறுத்தல்
![Women Entitlement Scheme : கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் ; OTP எண் கேட்கப்பட்டால் எவரும் பகிரவேண்டாம்... ஆட்சியர் அறிவுறுத்தல் Women Rights entitlement Rs.1000 No one should share if OTP number is asked Villupuram Collector Instruction Women Entitlement Scheme : கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் ; OTP எண் கேட்கப்பட்டால் எவரும் பகிரவேண்டாம்... ஆட்சியர் அறிவுறுத்தல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/14/11af14a7d7ee37ccf7b9cb331dbd475e1694710794654113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் : கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் வரப்பெற்ற குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து , கைப்பேசியில் OTP எண் கேட்கப்பட்டால் எவரும் பகிரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அறிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் (15.09.2023) துவங்கப்பட உள்ள நிலையில் இன்று முதல் ரூ.1000/- மகளிரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகையினை வங்கியிலிருந்து எடுப்பதற்கு உரிமைத் தொகை ATM கார்டு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஒரு சில மகளிருக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து OTP எண் கேட்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது.
இத்திட்டத்தில் பயனடைவதற்கு OTP எண் ஏதும் நடைமுறையில் இல்லை. இத்திட்டத்தின் கீழ் ஏடிஎம் கார்டு மூலமாகவோ அல்லது வங்கியில் நேரடியாக சென்று தொகையினை எடுத்துக்கொள்ளலாம். மேலும் OTP எண் பகிர எவரேனும் தொலைபேசியில் கேட்கப்பட்டால் அவரது கைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146-223265 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04146-222172 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தொகை வரப்பெறாதவர்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை அணுகி விவரத்தினை தெரிந்து கொள்ளலாம். மேலும் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)