மேலும் அறிய

கொரோனா பிரிவில் மாற்றப்பட்ட சடலங்கள்: தோண்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு

கடலூரில் கொரோனாவால் இறந்த இருவர் உடலை மாற்றி உறவினர்களிடம் வழங்கிய விவகாரத்தில், கடும் எதிர்ப்பை கடந்து புதைக்கப்பட்ட சடலத்தை மீண்டும் தோண்டி உறவினர்களிடம் சுகாதாரத்துறையினர் வழங்கினர்.

கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்தவர் ஜாகீர்(59). கொரோனா நோய் தொற்று காரணமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனை கொரோனா பிரிவுக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாயன்று உயிரிழந்த நிலையில், அதே போல் கொரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த ஆறுமுகம்(51) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இருவரின் உடல்களும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கொரோனா பிரிவில் மாற்றப்பட்ட சடலங்கள்: தோண்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு
 
ஆறுமுகத்திற்கு மேற்கொண்ட கொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்த நிலையில், அவரது உடலை நல்லடக்கம் செய்ய குடும்பத்தார் முயன்ற, உடலில் இருந்த திரையை நீக்கிய போது அங்கு ஆறுமுகத்தின் சடலத்திற்கு பதில் வேறு சடலம் இருந்தது தெரியவந்தது. உடனே மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஆறுமுகம் உடலும், ஜாகீர் உடலும் மாற்றி வழங்கப்பட்டது தெரியவந்தது. 
உடனே புவனகிரியில் உள்ள ஜாகீர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, கொரோனா தொற்று இருந்ததால் சடலத்தை பார்க்காமல் ஜாகீர் என நினைத்து ஆறுமுகத்தின் உடலை அவர்களது முறைப்படி நல்லடக்கம் செய்தது தெரியவந்தது.
 

கொரோனா பிரிவில் மாற்றப்பட்ட சடலங்கள்: தோண்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு
தகவல் அறிந்து ஜாகீர் குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்தனர். இருதரப்பும் தங்களுக்கு சொந்தமான சடலத்தை தருமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருதரப்பையும் சமரசம் செய்த அதிகாரிகள், அவர்களின் ஒப்புதலுடன் ஆறுமுகத்தின் சடலத்தை எடுத்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. கொரோனா பாதித்தவரின் உடலை தோண்டி எடுக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களையும் அதிகாரிகள் சமரசம் செய்து ஒருவழியாக ஆறுமுகம் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் இரு சடலங்களும் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களின் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. 

சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷிடம் கேட்ட போது, ‛‛உடல்களை வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பின் ஒப்புதலுடன் உடல்கள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தவறுக்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்,’’ என்றார். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
J&K Cloudburst: ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
SC on Aadhar Card: அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Embed widget