மேலும் அறிய

கொரோனா பிரிவில் மாற்றப்பட்ட சடலங்கள்: தோண்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு

கடலூரில் கொரோனாவால் இறந்த இருவர் உடலை மாற்றி உறவினர்களிடம் வழங்கிய விவகாரத்தில், கடும் எதிர்ப்பை கடந்து புதைக்கப்பட்ட சடலத்தை மீண்டும் தோண்டி உறவினர்களிடம் சுகாதாரத்துறையினர் வழங்கினர்.

கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்தவர் ஜாகீர்(59). கொரோனா நோய் தொற்று காரணமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனை கொரோனா பிரிவுக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாயன்று உயிரிழந்த நிலையில், அதே போல் கொரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த ஆறுமுகம்(51) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இருவரின் உடல்களும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கொரோனா பிரிவில் மாற்றப்பட்ட சடலங்கள்: தோண்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு
 
ஆறுமுகத்திற்கு மேற்கொண்ட கொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்த நிலையில், அவரது உடலை நல்லடக்கம் செய்ய குடும்பத்தார் முயன்ற, உடலில் இருந்த திரையை நீக்கிய போது அங்கு ஆறுமுகத்தின் சடலத்திற்கு பதில் வேறு சடலம் இருந்தது தெரியவந்தது. உடனே மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஆறுமுகம் உடலும், ஜாகீர் உடலும் மாற்றி வழங்கப்பட்டது தெரியவந்தது. 
உடனே புவனகிரியில் உள்ள ஜாகீர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, கொரோனா தொற்று இருந்ததால் சடலத்தை பார்க்காமல் ஜாகீர் என நினைத்து ஆறுமுகத்தின் உடலை அவர்களது முறைப்படி நல்லடக்கம் செய்தது தெரியவந்தது.
 

கொரோனா பிரிவில் மாற்றப்பட்ட சடலங்கள்: தோண்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு
தகவல் அறிந்து ஜாகீர் குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்தனர். இருதரப்பும் தங்களுக்கு சொந்தமான சடலத்தை தருமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருதரப்பையும் சமரசம் செய்த அதிகாரிகள், அவர்களின் ஒப்புதலுடன் ஆறுமுகத்தின் சடலத்தை எடுத்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. கொரோனா பாதித்தவரின் உடலை தோண்டி எடுக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களையும் அதிகாரிகள் சமரசம் செய்து ஒருவழியாக ஆறுமுகம் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் இரு சடலங்களும் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களின் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. 

சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷிடம் கேட்ட போது, ‛‛உடல்களை வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பின் ஒப்புதலுடன் உடல்கள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தவறுக்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்,’’ என்றார். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Embed widget