Singappen Task Force: ‘குட் டெச் அல்ல, பேட் டெச் அல்ல, இனி டோன்ட் டெச்’ - கர்ஜித்த சிங்கப்பெண் படை.. வீறு கொண்டு எழுந்த பெண்கள்
Singappen Special Task Force: திருவாரூரில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

‘குட் டெச் அல்ல, பேட் டெச் அல்ல, இனி டோன்ட் டெச்’ என தமிழக முதல்வரின் சிங்கப்பெண் காவல் படை சார்பாக திருவாரூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் பேசியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள், மற்றும் பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க சிங்கப்பெண் என்கின்ற தனி காவல் பிரிவினை தொடங்கியுள்ளார். இதில் திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் நான்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருவாரூரில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிங்கப்பெண் படை உதவி ஆய்வாளர் உஷாராணி மற்றும் இரண்டு காவலர்கள் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து விளக்கமாக பேசியதோடு அந்த பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் விளக்கமாக பேசினார்கள்.
மேலும் உதவி ஆய்வாளர் பேசுகையில், குட் டெச் அல்ல பேட் டெச் அல்ல இனி டோன்ட் டெச் எனவும் இது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்தார். தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் கேட்டு தெரிந்து கொண்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















