மேலும் அறிய

Tamil Nadu Coronavirus : தமிழகத்தை எச்சரிக்கும் கொரோனா உயிரிழப்பு.. 13,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 78 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் பரவிவருகிறது. இதுவரை இல்லாத வகையில், நேற்று மட்டும் இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 12 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்து 776 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு உறுதி செய்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tamil Nadu Coronavirus : தமிழகத்தை எச்சரிக்கும் கொரோனா உயிரிழப்பு.. 13,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி..

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8,078 நபர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள வீடு திரும்பியுள்ளனர். நேற்று மாநிலம் முழுவதம் 59 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று 78  நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் புதிதாக 13 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 842 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 9 ஆயிரத்து 932 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Tamil Nadu Coronavirus : தமிழகத்தை எச்சரிக்கும் கொரோனா உயிரிழப்பு.. 13,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி..

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 51 ஆயிரத்து 487-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 8 ஆயிரத்து 432 நபர்களும், பெண்கள் 5 ஆயிரத்து 344 நபர்களும் ஆகும். கொரோனா தொற்று குணமடைந்து இன்று மட்டும் 8 ஆயிரத்து 078 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 044 ஆக உள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி இன்று 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களில் 44 பேர் தனியார் மருத்துவமனையிலும், 34 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்களாக இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் இன்று 37 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின்  எண்ணிக்கை 95 ஆயிரத்து 048-ஆக இருக்கிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
" அம்மா கிட்ட சொன்னேன் கண்டுகல " 9 - ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக் காதலன்
பங்குனி முயக்கம்? தமிழர் பாரம்பரியத்தின் அரிய ஆன்மிக விழா: தெரிந்து கொள்ளுங்கள்
பங்குனி முயக்கம்? தமிழர் பாரம்பரியத்தின் அரிய ஆன்மிக விழா: தெரிந்து கொள்ளுங்கள்
இன்று ஆடி பௌர்ணமி! இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
இன்று ஆடி பௌர்ணமி! இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Embed widget