மேலும் அறிய

"தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்" தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்!

சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாளை எடுத்து செல்லப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.

Satyabrata Sahoo: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தியா முழுவதும் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் தொடங்குகிறது. அந்த வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

தேர்தலுக்கு தயாரான தமிழ்நாடு:

கடந்த 45 நாள்களாக அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வந்த சூறாவளி பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடம் நிறைவு பெற்றது. இந்த நிலையில், தேர்தலுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அந்ததந்த சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாளை எடுத்து செல்லப்படும்.

தேர்தல் அதிகாரிகளும் அவர்களின் வாக்குச்சாவடிகளுக்கு நாளை மாலைக்குள் சென்றுவிடுவார்கள். பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகளும் சிஆர்பிஎப் அதிகாரிகளும் எங்கெங்கு செல்ல வேண்டும் என்பது தயாராக உள்ளது.

"சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஏற்பாடுகள்"

தமிழ்நாடு முழுவதும் 68,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில், 55,000 வாக்குச்சாவடிகளில் இன்டர்நெட் வசதி நன்றாக உள்ளது. இம்மாதிரியான வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் நீண்ட வரிசையில் நிற்காமல் வாக்களிக்க உதவ வேண்டும் என ஒவ்வொரு வாக்காளரையும் கேட்டு கொள்கிறேன். வாக்கு செலுத்துவது ஒவ்வொருவரின் உரிமை. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்" என்றார்.

தொடர்ந்து விரிவாக பேசிய சத்யபிரதா சாஹூ, "கிட்டத்தட்ட 90 சதவிகித வாக்குச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுவிட்டன. வாக்குச்சீட்டு கொடுக்கும்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் அதை பெற்று கொள்ளவில்லை என்றால் வாக்கு செலுத்த கூடாது என்ற கட்டாயம் இல்லை.

வாக்கு செலுத்த வாக்குச்சீட்டு அவசியமா?

தேர்தல் ஆணையம் சொன்ன 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும் வாக்கு செலுத்தலாம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. இருந்தபோதிலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிஆர்பிஎப் வீரர்கள், கண்காணிப்பு கேமரா, தேர்தல் பார்வையாளர் என தயார் நிலையில் இருந்து, தகவல் கொடுப்பார்கள். புகார் கொடுக்க எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய வந்தவர்கள், அந்தந்த தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்" என்றார்.

இதையும் படிக்க: அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் காங்கிரஸ்.. ரகசியத்தை உடைத்த ராகுல் காந்தி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Mullivaikkal Remembrance Day: ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
CSK Vs RCB, IPL 2024: கருணை காட்டுவாரா வருண பகவான்? நாக்-அவுட்டில் பெங்களூருவை வீழ்த்தி பிளே-ஆஃப் செல்லுமா சென்னை?
CSK Vs RCB, IPL 2024: கருணை காட்டுவாரா வருண பகவான்? நாக்-அவுட்டில் பெங்களூருவை வீழ்த்தி பிளே-ஆஃப் செல்லுமா சென்னை?
‘ஈ சாலா கப் நம்தே’ - ஆர்.சி.பிக்காக சிதறு தேங்காய் உடைத்து வழிப்பட்ட இளைஞர்கள்!
‘ஈ சாலா கப் நம்தே’ - ஆர்.சி.பிக்காக சிதறு தேங்காய் உடைத்து வழிப்பட்ட இளைஞர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Mullivaikkal Remembrance Day: ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
CSK Vs RCB, IPL 2024: கருணை காட்டுவாரா வருண பகவான்? நாக்-அவுட்டில் பெங்களூருவை வீழ்த்தி பிளே-ஆஃப் செல்லுமா சென்னை?
CSK Vs RCB, IPL 2024: கருணை காட்டுவாரா வருண பகவான்? நாக்-அவுட்டில் பெங்களூருவை வீழ்த்தி பிளே-ஆஃப் செல்லுமா சென்னை?
‘ஈ சாலா கப் நம்தே’ - ஆர்.சி.பிக்காக சிதறு தேங்காய் உடைத்து வழிப்பட்ட இளைஞர்கள்!
‘ஈ சாலா கப் நம்தே’ - ஆர்.சி.பிக்காக சிதறு தேங்காய் உடைத்து வழிப்பட்ட இளைஞர்கள்!
'காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா?' - செல்வப்பெருந்தகை
'காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா?' - செல்வப்பெருந்தகை
Rasipalan: மீனத்துக்கு அன்பு ; மேஷத்துக்கு உற்சாகம்; ரிஷபத்துக்கு பயணம் - முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மீனத்துக்கு அன்பு ; மேஷத்துக்கு உற்சாகம்; ரிஷபத்துக்கு பயணம் - முழு ராசிபலன்கள் இதோ
MI vs LSG Match Highlights: வீழ்த்தப்பட்ட மும்பை இந்தியன்ஸ்; வெற்றியோடு வெளியேறிய லக்னோ!
MI vs LSG Match Highlights: வீழ்த்தப்பட்ட மும்பை இந்தியன்ஸ்; வெற்றியோடு வெளியேறிய லக்னோ!
PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
Embed widget