மேலும் அறிய

TN Fishermen Arrest: காலையிலேயே அதிர்ச்சி..! தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

TN Fishermen Arrest: புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நிலையில், 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்த்ய 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடரும் சோகம்:

ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு நிலையில், தற்போது மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தொடரும் கைது நடவடிக்கைகளை தவிர்க்கவும், சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்து தாயகம் கொண்டு வரவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைது:

  • ஜுலை 1ம் தேதி தனுஷ்கோடியை சேர்ந்த 24 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • ஜூன் 25ம் தேதி நாகை மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது

  • கடந்த ஜூன் 17-ஆம் தேதி வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • தொடர்ந்து ஜூன் 22ம் தேதியன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அந்த பதற்றம் குறைவதற்கு முன்பாகவே கடந்த ஜூன் 25ம் தேதியன்று நாகை மாவட்டம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 10 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்தனர்

முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:

மீனவர்கள் கைது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கடந்த 4ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், “ தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சம்பவங்கள் மீனவர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையிலிருந்த கொண்டுவருவதற்கு மீட்புப்படகுகள், பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும், அடிப்படைத் தேவைகளை வழங்கிவிடவும் அனுமதி தர வேண்டுமென்று தமிழக மீனவர் சங்கங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Japan's Fails: நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்திSenthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Japan's Fails: நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
MBBS BDS Application 2025: தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Piyush Chawla Retires: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா..! ஷாக்கில் ரசிகர்கள்!
Piyush Chawla Retires: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா..! ஷாக்கில் ரசிகர்கள்!
Tata EV Discounts: விட்டதை பிடிக்கணும், லட்சத்தில் விலையை குறைத்த டாடா - EV கார்களுக்கு கொட்டும் ஆஃபர்கள்
Tata EV Discounts: விட்டதை பிடிக்கணும், லட்சத்தில் விலையை குறைத்த டாடா - EV கார்களுக்கு கொட்டும் ஆஃபர்கள்
Embed widget